மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் பூசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் மகிழுர் பகுதியை சேர்ந்த பூசகரான க.வீரக்குட்டி(61வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இன்று காலை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடீ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


0 Comments