சீரற்ற கால நிலையினால் கடந்த செவ்வாய்க்கிழமை மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகுமெனவும் அது வரை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தினத்தை அறிவிக்க முடியாது எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை பாடசாலைகளை திறக்க முடியுமா என தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் ஆனால் அது தொடர்பாக வெள்ளிக்கிழமையே தீர்மானிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments