மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் மகாதூபி கும்பாவிஷேக நிகழ்வானது 3.04.2017 அன்று கிரியைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு 5.04.2017 நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. கும்பாவிஷேக நிகழ்வின் போது கிருஷ்ண பகவானின் கருட வாகனம் ஆலய வளாகப் பகுதியில் வானின் வலம் வந்து ஆசீர்வாதம் வழங்கியிருந்தது. 108 சங்குகளினால் சங்காபிசேகமும் 1008 சகஸ்நாம மந்திர உட்சாடனமும் 16.04.2017 அன்று னடைபெற்றது இந்நிகழ்வின் போது கருடன் வானின் தாழ்வாக ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இது வரலாற்று நிகழ்வாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு முந்திய காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறவில்லை என நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். கருடன் வலம் வந்த வேளையில் புகைப் படங்களை எடுத்து எமது செய்திப்பிரிவுக்கு பக்தர்கள் அனுப்பியுள்ளனர். இதனைப் படங்களில் காணலாம்.
0 Comments