Home » » தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’

தேற்றாத்தீவு சிவகலை வித்தியால மாணவர்களின் டெங்கு ஒளிப்பு சிரமதானம்’




மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிpலையில் அவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.குறிப்பாக பாடசாலை மட்டத்தில் அதிகளவில் டெங்கு நோய்தாக்கத்திற்குட்படுவதனால் பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெரும் இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் முன்னுதாரணமாக பொதுமக்களின் நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் பொதுமக்களுக்கு நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வினையும் மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பாடசாலை சுற்று வட்டாரத்திற்குட்ட பொது மக்களின் வீடுகள் காணிகளில் டெங்கு பரவக்கூடிய இடங்களை துப்பரவு பண்ணும் சிரமதானம் இடம் பெற்றதுடன் டெங்கு நூளம்பு பெருக்கம் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பாடசாலை மாணவர்கள் பொது மக்களுக்கு விளக்கம்மளித்தனர்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |