தூக்கில் தொங்கிய நிலையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தினை சேர்ந்தவர் 22 வயதுடையவர் என்றும் (விநாயகம் தனா பிரியன்) , ஒரு பிள்ளையின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சடலமாக மீட்கப்பட்டவரின் கால்களில் இரத்த கறை காணப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற ரீதியில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments