Home » » இருளில் மூழ்கப்போகும் இணைய உலகம்...! 31ஆம் திகதி நடக்கப்போவது என்ன..?

இருளில் மூழ்கப்போகும் இணைய உலகம்...! 31ஆம் திகதி நடக்கப்போவது என்ன..?

புவி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுக்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்திருக்க கூடிய ஒன்று.
எனினும், பல ஆண்டுகளாக சுற்றும் போது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விநாடியை இழந்திருக்கும் அல்லது அதிகரித்திருக்கும்.
அதாவது புவி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரமும் ஒரு விநாடியும் எடுக்கும் அதனை லீப் நேரம் என குறிப்பிடுவார்கள்.
இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி புவி தன்னை சுற்றிவர 24 மணி நேரமும் ஒரு விநாடியும் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணிக்கு 61 விநாடிகள் காட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அனைத்து கணினிகளும் 60 விநாடிகளை மையமாககொண்டு இயங்குகின்றது. தற்போது ஒரு விநாடி அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து கணினிகளும் திடீரென நின்று போககூடிய (ஷெட் டவுன் ஆககூடிய) வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் இதனை கண்டறிந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி அனைத்து எண்முறை (digital) கடிகாரங்களும் 61 விநாடிகளை காட்டவேண்டியுள்ளது.
இதன் காரணமாக கணினிகள் பலவும் நிலைத்தடுமாறி நின்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இணைய உலகம் இருளில் மூழ்கிப் போகலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் வகையில் இன்று முதல் நானோ விநாடிகளை (விநாடியை 60 பிரித்தால் மைக்ரோ விநாடி, அதனை 60ல் பிரித்தால் நானோ விநாடி) கழிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து கணினிகள் மற்றும் இணையம் சார்ந்த அனைத்து சாதனங்களும் இதற்கான மேம்படுத்தலை (அப்டேட்) தாமாகவே செய்துகொள்ள அப்பிள், மைக்ரோசொப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சீர்செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2000ஆம் ஆண்டும் இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |