Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்த்தர் பலி

பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினருடன், சுற்றுலா சென்ற நிலையில், கடலில் நீராட சென்ற சமயத்திலேயே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடலில் மூழ்கியவரின் சடலத்தினை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருந்த நிலையில் சடலம் இன்று காலை 6.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பாசிக்குடா அமயா சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரை பகுதியில் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments