Advertisement

Responsive Advertisement

மூன்று நாடுகளின் எல்லையை கடந்து தப்பிய ஜேர்மன் கொலையாளி

பேர்லினில் கிறிஸ்மஸ்வியாபார நிலையங்கள் காணப்பட்ட பகுதிக்குள் லொறியை செலுத்தி பலரை படுகொலை செய்த அனீஸ் அம்ரி கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் தேடப்பட்ட நிலையில் அவரால் பல நாடுகளின் எல்லைகளை கடந்து இத்தாலிக்கு செல்ல முடிந்துள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவர் எவ்வாறு 1000 கிலோமீற்றரை கடந்தார் (பேர்லினிலிருந்து மிலான்) என்பது முக்கியகேள்வியாகவுள்ளது.அதிகாரிகள் இது குறித்து இறுக்கமான மௌனத்தைகடைப்பிடிக்கின்றனர். எனினும் பிரான்ஸ் மற்றும் இத்தாலிய ஊகங்கள் அவரால் எவ்வாறு தப்பமுடிந்தது என்ற விவரத்தை வெளியிட்டு வருகின்றன.அம்ரி கொல்லப்பட்ட பின்னர் அவரிடம் காணப்பட்ட இரு புகையிரபயணசீட்டுகள் அவர் பிரான்ஸ் ஊடாகவே தப்பிச்சென்றார் என்பதை காட்டிக்கொடுத்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.அவர் பிரான்ஸின் லைன் நகரிலிருந்து சம்பெரிக்கும் பின்னர் அங்கிருந்து இத்தாலியின் மிலானிற்கும் சென்றுள்ளார்.
அவர் இவ்வாறு நாடுகளை கடந்து பயணம் செய்துகொண்டிருந்தவேளை ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் அவர் எங்கிருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர், இறுதியில் வழமையான சோதனை நடவடிக்கையொன்றின்போதே அவர் கொல்லப்பட்டார். தன்னை சோதனையிட முயன்ற பொலிஸ் அதிகாரியை சுட்ட அம்ரியை இன்னொரு பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொன்றார்.தற்போதுஅவர் பயணம் செய்திருக்கலாம் என தாங்கள் கருதும்பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்கள் போன்றவற்றை அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர், எனினும் தடயங்களை கண்டுபிடிப்பது கடினமாகவுள்ளது என பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளின் எல்லைப்பாதுகாப்பு குறித்த கேள்விகளும் இந்த சம்பவத்தின் பின்னர் எழுந்துள்ளன.
வலதுசாரி கட்சிகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கூச்சலிட ஆரம்பித்துள்ளன,பேர்லின் கொலையாளியால் மூன்று நாடுகளை கடந்து செல்ல முடிந்துள்ளமை ஐரோப்பியநாடுகளின் எல்லை பாதுகாப்பு மோசமான நிலையில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாக வலதுசாரி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments