Home » » உ/த பெறுபேறு தாமதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

உ/த பெறுபேறு தாமதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

2016 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாது தாமதப்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதால் பரீட்சார்த்திகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலக்காவதாகவும் பல மாணவர்களுக்கு பல்வேறு புலமைப் பரிசில்கள் கிடைக்காது போகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இதனால் மாணவர்களுக்காக தாம் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 12ஆம் திகதியளவில் பெறுபேற்றை வெளியிட முடியுமென கருதுவதாகவும் இம்முறை தொழிநுட்ப பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதனாலேயே பெறுபேற்றை வெளியிடுவதில் தாமதமாதத்திற்கு காரணமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |