Advertisement

Responsive Advertisement

மரணம் பற்றி எமதர்மராஜா கூறிய இரகசியங்கள்!

நாம் நிரந்தரமாக இந்த பூமியில் வாழப்போவது இல்லை, என்றாவது ஒரு நாள் மரணத்தை தழுவுவோம் என்பதை அனைவரும் அறிவோம்.
பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் மரணம் என்பது சரிசமமே.
மரணம் பற்றி பேசும் போதெல்லாம், அதனை பற்றிய உரையாடலில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதற்கு காரணம் அனைவருக்கும் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே.
அதனை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியானால் சரியான பக்கத்திற்கு தான் நீங்கள் வந்துள்ளீர்கள்.
ஆம், மரணத்தின் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான இரகசியங்களை பற்றி நாங்கள் கூறப் போகிறோம். இதனை உயர்த்தி காட்டியது வேறு யாருமல்ல.
மரணத்தின் கடவுளான எமதர்மராஜனே. பழங்கால சமயத்திரு நூல்களின் படி, மரணம் மற்றும் ஆத்மா பற்றிய இரகசியங்களை நாச்சிகேட்டா என்ற குழந்தையும் எமதர்மராஜனும் கலந்துரையாடியுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றது.
நாச்கேட்டாவிடம் எமதர்மராஜன் கூறிய மரணத்தைப் பற்றிய சில இரகசியங்களை பற்றி நாமும் தெரிந்து கொள்வோமா?
நாச்சிகேட்டாவின் மூன்று வரங்கள்
  • எமதர்மராஜனை சந்திக்க நாச்சிகேட்டா சென்ற போது, அவரிடம் மூன்று வரங்களை அவன் கேட்டான்.
அவன் கேட்ட முதல் வரம்
  • தன் தந்தையின் அன்பை பெறுவது,
இரண்டாவது வரம்
  • அக்னி வித்யா பற்றி தெரிந்து கொள்வது,
மூன்றாவது வரம்
மரணம் மற்றும் ஆத்மாக்யன் (ஆத்மாவின் அறிவு) பற்றி தெரிந்து கொள்வது.
அவனுடைய கடைசி வரத்தை நிறைவேற்ற எமதர்மராஜன் விரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தையோ பிடிவாதமாக இருந்தது.
அதனால் மரணத்தை பற்றிய இரகசியங்களையும், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதையும் அவனிடம் தெரிவிக்க எமதர்மராஜன் சம்மதித்தார்.
எமதர்மராஜா கூறியுள்ள சில மரண இரகசியங்கள்..
சமயத் திருநூல்களின் படி, ஓம் (ஓங்கார்) என்பது பரமாத்மாவின் ஸ்வரூபம் என்பதை எமதர்மராஜன் வெளிப்படுத்தியுள்ளார் . மனிதனின் இதயத்தில் தான் பிரம்மா குடி கொண்டுள்ளார் என்பதையும் அவர் கூறியுள்ளார்.
மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனுடைய ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதையும் எமதர்மராஜன் குறிப்பிட்டுள்ளார்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆன்மாவின் அழிவிற்கும் உடலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது.
மரணத்திற்கு பிறகு, ஒரு மனிதன் ஜனன மரண சுழற்சியை முடிக்கிறான். அப்படியானால் பிரம்ம ரூபம் என அறியப்படும், ஜனன மரண சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான்.
கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், நாத்திகவாதிகளும் மரணத்திற்கு பிறகு அமைதியை தேடி அலைவார்கள் என்பது எமதர்மராஜனின் கூற்று. வெளிப்படையாக கூற வேண்டுமானால், அவர்களின் ஆன்மா அமைதியை தேடி அலையும்.
மரணத்தை பற்றிய சில ரகசியங்கள் தான் இவைகள்...
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்,
அறிகுறி 1
இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம்.
சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது.
இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்கவே முடியாது.
அறிகுறி 2
எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால்,
அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்பதற்கான அறிகுறிகளாம்.
அறிகுறி 3
எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும்
ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.
அறிகுறி 4
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 5
ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லையாம்.
அறிகுறி 6
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறப்பதற்கான அறிகுறிகள்.
அறிகுறி 7
நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திப்பார்கள்.
அறிகுறி 8
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.
அறிகுறி 9
ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 10
சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் எனவும், ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது
கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் எனவும் சிவபுராணம் கூறுகின்றது.

Post a Comment

0 Comments