கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 28ஆம் திகதி இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி விசாரணை செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கொழும்பு வைத்தியசாலையில் ஆறு பேருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இது தொடர்பில் உடனடி அறிக்கையை முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது
0 Comments