Advertisement

Responsive Advertisement

க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அமைவாக மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பரீட்சையின் இறுதி தினமான டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை அமுலாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
யாராளவது தனி நபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தடையுத்தரவை மீறி செயற்பட்டால் அவர்கள் பரீட்சை சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.

Post a Comment

0 Comments