Home » » மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை;சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை;சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கின் 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களை டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையில் வசித்து வந்த 32 வயதான ஜெனீரா பானு மாஹிர் என்ற பெண்ணும் அவரது தாயாரான 56 வயதுடைய நூர் முஹம்மது உஸைரா ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி கொலை செய்யபப்பட்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |