Advertisement

Responsive Advertisement

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

கிழக்கில் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தல் கிரியை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
 தொடர்ந்து 18 தினங்கள் நடைபெறும் இவ்வாலய உற்சவத்தில் எதிர்வரும் 03 ஆம்திகதி சுவாமி எழுந்தருளப்பண்ணல் நிகழ்வும் 08ஆம் திகதி கலியாணக்கால் வெட்டுதல்  12ஆம் திகதி பஞ்சபாண்டவர் திரௌபதி சகிதம் வனவாசம் செல்லல் 13ஆம்திகதி அருச்சுனன் தவநிலை செல்லல் 14ஆம் திகதி ஆலய உற்சவத்தின் சிகரமான தீப்பாய்தல் நிகழ்வு இடம்பெறும் .

மறுநாள் 15ஆம் திகதி தீக்குளிக்கு பால்வார்க்கும் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறும் .

Post a Comment

0 Comments