Home » » அம்பாறை வீரமுனைப் பகுதியில் இனந்தெரியாத குழு அச்சுறுத்தல்: மக்கள் பதற்றம்

அம்பாறை வீரமுனைப் பகுதியில் இனந்தெரியாத குழு அச்சுறுத்தல்: மக்கள் பதற்றம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக பிரதேச மக்கள் அச்ச நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக ஒரு வகையான சீருடையில் ஆயுதங்களுடன் வருவோர் பெண்கள் மற்றும் இளைஞர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு மற்றும் அதிகாலை வேளையில் குழுவாக வரும் இவர்கள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பாடுகளை செய்துவிட்டு தப்பிச்செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வீரமுனை பிரதேச மக்கள் அச்ச சூழ்நிலையில் வாழ்வதாகவும் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் வீரமுனை பிரதேசத்தில் பல்வேறு தடவைகள் இனப்படுகொலை நடைபெற்றுள்ளதுடன் கிராமத்தினை விட்டு விரட்டப்பட்டும் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இப்பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட்டுவரும் நிலையில் அவற்றினை குழப்பும் சக்திகள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |