சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் நாளை திங்கட் கிழமை அரச விடுமுறை வழங்கப்படாது எனவும் வழமைப்போன்று நாளை வேலை நாளாக பேணப்படுமெனவும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மே தினம் வந்துள்ளதால் நாளை அரச விடுமுறை தினமாக இருக்குமா என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையிலேயே பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் தனியார் துறையினருக்கு நாளை விடுமுறை வழங்குமாறு தொழில் அமைச்சர் தொழில் தருனர்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: