வின்சென்ற் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி இன்று வெபர் மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமானது
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மாநகர முதல்வர் எம் .உதயகுமார் மற்றும் மட்டு கல்வி வலய உயர் அதிகாரிகள் திருமதி எஸ்.கங்கேஸ்வரன் திரு ஏ.சுகுமாரன் மற்றும் வைத்தியர் திருமதி க.குணரெட்ணம் மற்றும் சிறந்த திறமையாளர் மாணவி கௌ.நிஷாங்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இல்லங்களுக்கிடையே இடம்பெற்ற போட்டிகளில் முதலாம் இடத்தை வின்சென்ற் இல்லம் தட்டிக்கொண்டது.
0 Comments