Home » » மட்டக்களப்பு ஏறாவூரில் மஞ்சள் கடவையில் விபத்து மிக வேகமாக மோதிவிட்டுச் செல்லும் மோட்டார் சைக்கிளின் வீடியோக் காட்சிகள்

மட்டக்களப்பு ஏறாவூரில் மஞ்சள் கடவையில் விபத்து மிக வேகமாக மோதிவிட்டுச் செல்லும் மோட்டார் சைக்கிளின் வீடியோக் காட்சிகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட ஏறாவூர் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் தாயும் மகனும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு மஞ்சள் கடவையை கடந்து வரும் வேளையில் அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
ஏறாவூர் நகரைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி செய்த்தூன் (வயது 36) ஏ.எச்.இஸ்ஹான் (வயது 06) என்ற இருவருமே இவ் விபத்தில் காயடைந்தனர்.
குறித்த விபத்து சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் குறித்த விசாரணையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சள் கடவையை கடக்க முற்படும் போது பல விபத்துக்கள் கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |