இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது
.
.
இந்த விபத்துக்களில் பாதசாரிகள் கடவையான வீதி மஞ்சள் கோட்டில் இடம்பெற்றவிபத்துக்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
பாதசாரிகள் மஞ்சள் கோடு என்பதால் அஜாக்கிரதையுடன் அதனூடாக பயணித்தல் மற்றும் வாகன சாரதிகள் மஞ்சள்கோட்டுக் கடவையை மற்றும் வீதி ஒழுங்குகளை மீறி வாகனங்களை செலுத்துதல் ஆகிய காரணங்களே விபத்துகளுக்கு காரணமென வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
0 comments: