வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் 15ம் திகதி அந்த போராட்டத்தை முன்னெடுக்க தனியார் பஸ் உரிமையார்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு திட்டத்தின் ஊடாக வாகன பதிவு கட்டணம் , புகை பரிசோதனை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
0 comments: