இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் மிக விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவோர் மிக அவதானமாக தொழிற்படுமாறு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.


0 Comments