Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விளையாட்டு துப்பாக்கியுடன் கொள்ளைக்கு சென்ற இருவர் மடக்கிப்பிடிப்பு

கல்கிசை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிட சென்ற இருவர் அங்கிருந்த ஊழியர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்து நிறுவனத்துக்குள் சென்ற கொள்ளையர்கள் இருவரும் நிஜ துப்பாக்கி போன்று  விளையாட்டு துப்பாக்கிகளை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி பணத்தை கொள்ளையிட முயற்சித்த போது உழியர்களினால் இருவரும் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments