Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்கள் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் இவ்வாறு பதவி விலக உள்ளனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் இவ்வாறு பதவி விலகத் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கைது உள்ளிட்ட காரணிகளினால் குறித்த அமைச்சர்களின் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள், அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே அமைச்சர்கள் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments