அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்து இட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் இன்றிலிருந்து 19 ஆவது திருத்தச் சட்டம் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி ஆளும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சிகள் சில திருத்தங்களை முன்வைத்திருந்தன.
இந்த திருத்தங்கள் காரணமாக சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஆவணத்தில் சபாநாயகர் கையொப்பமிடவில்லை. திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட புதிய ஆவணத்தின் சிங்கள ஆவணம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆவணத்தில் இன்று சபாநாயகர் கையொப்பமிட்டார்.


0 Comments