Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிர­தமர், வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு இடை­யி­லான முரண்­பா­டுகள்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும இடையில் முரண்­பா­டான நிலை ஏற்பட்­டி­ருக்­கின்­றது. இரு­வரும் ஒரு­வர் ­மீது ஒருவர் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றனர்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது தர்­ம­சங்­க­ட­மான நிலைக்கு உள்­ளாகி இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை அறிக்கை ஒத்­தி­வைக்­கப்­படப் போவ­தாக தெரிந்­த­தை­ய­டுத்து இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின் ­போது இனப்­ப­டு­கொ­லையே இடம்­பெற்­றது என்றும் இது­கு­றித்து சர்­வ­தேச விசா­ரணை இன்­றி­ய­மை­யா­தது எனவும் வலியு­றுத்தி வட­மா­காண சபையில் ஏக­ம­ன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்தை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­­னேஸ்­வரன் சமர்ப்­பித்து நிறை­வேற்­றி­யி­ருந்தார்.
இலங்கை வந்­தி­ருந்த தெற்­கா­சிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வி­னரை சந்தித்து பேசி­யி­ருந்தார்.
இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­ போது ஐ.நா.விசா­ரணை அறிக்கை செப்­டெம்பர் வரை ஒத்­தி­வைக்­கப்­படும் என்ற கருத்­தினை அவர் தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்தே வட­மா­காண சபையில் இனப்­ப­டு­கொலை தொடர்­பான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.
இந்த வேளையில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன வட­ப­கு­தி­யி­லுள்ள இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­ப­ட­மாட்­டாது என்று தெரி­வித்­தி­ருந்தார்.
இந்­த­நி­லையில் இனப்­ப­டு­கொலை தீர்­மானம் மீதான விவா­தத்தில் உரை­யாற்­றிய வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­­னேஸ்­வரன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சாடி பேசி­யி­ருந்தார்.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தான் சந்­தித்து பேசி­ய­தா­கவும் இதன்­போது அவர் தெரி­வித்த கருத்­துக்­களை நிறை­வேற்­ற­வில்லை என்றும் மாம­னான ரணில் கூறி­ய­தையே மரு­ம­க­னான ருவான் விஜ­ய­வர்­தன யாழ்ப்­பா­ணத்தில் கூறி­யுள்­ள­தா­கவும் விக்­னேஸ்­வரன் சாடி­யி­ருந்தார். இந்த விவ­கா­ர­மா­னது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கோப­ம­டையச் செய்­தி­ருந்­தது.
ஐ.நா. விசா­ரணை அறிக்கை ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குரு­நா­கலில் நடை­பெற்ற கட்­சியின் கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றி­யி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விசா­ரணை அறிக்­­கை­யினை ஒத்­தி­வைத்­ததன் மூலம் சர்­வ­தேச சமூகம் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­­னேஸ்­வ­ரனின் கன்­னங்­களில் அறைந்­துள்­ள­தா­கவும் இனப்­ப­டு­கொலை தீர்­மானம் இன­வா­த­மா­னது என்றும் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.
இவ்­வாறு இரு­வரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் குற்றம்சாட்­டி­வந்­த­ நிலையில் பிர­தமர் ரணில் கூற்­றுக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் பதி­ல­ளித்­தி­ருந்தார். இதில் உண்­மை­களை வெளிக்­கொண்­டு­ வ­ரு­வது இன­வா­த­மா­காது. இன­வா­தத்தைப் பரப்­பு­வது நானா அல்­லது பிர­த­மரா என்று விக்­னேஸ்­வரன் அந்தப் பதிலில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அத்­துடன் 2000ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சியல் தீர்­வுக்­கான திட்ட வரைவை எரி­யூட்­டி­யது யார் என்ற கேள்­வி­யையும் முதல்வர் எழுப்­பி­யி­ருந்தார்.
இந்த நிலையில் சில தினங்­க­ளுக்கு முன்னர் தமி­ழ­கத்தின் தந்தி தொலைக்­காட்­சிக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க செவ்­வி­யொன்றை வழங்­கி­யி­ருந்தார். இந்தச் செவ்­வி­யிலும் முதல்வர் விக்­னேஸ்­வ­ரனை அவர் கடு­மை­யாக குற்றம் சாட்­டி­யி­ருந்தார். விக்­­னேஸ்­வரன் பொய் கூறு­கின்றார். வடக்கில் இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­றது என அவர் தெரி­வித்­தி­ருப்­பது பொறுப்­பற்ற கருத்­தாகும். இதனை அவர் வாபஸ் வாங்க வேண்டும். அது­வரை அவ­ருடன் பேச நான் தயா­ரில்லை. நான் இம்­மாதம் யாழ்ப்­பாணம் செல்வேன். ஆனால் விக்­னேஸ்­வ­ரனை சந்­திக்க மாட்டேன். அவ­ருடன் பேசவும் நான் தயா­ரில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுத் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­த­னுடன் பேச்­சுக்­களை நடத்­து­கின்ற, எந்தப் பிரச்­சி­னை­யா­னாலும் அவ­ரு­ட­னேயே பேசுவேன் என்று பிர­தமர் ரணில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
பிர­த­மரின் இத்­த­கைய கருத்­தா­னது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையை பெரும் தர்­ம­சங்­க­டத்­துக்குள் உள்­ளாக்­கி­யுள்ளது. வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கும் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கு­மி­டையில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற இந்த முறுகல் நிலை­யா­னது தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.
ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ருடன் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் பல சுற்­றுப்­ பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார். தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு, அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் இந்தப் பேச்­சுக்­க­ளின்எ­போது விரிவாக ஆரா­யப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்தே பொது எதி­ரணி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.
இவ்­வா­றான பின்­ன­ணியில் அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்து செயற்­பட்டு அர­சியல் தீர்வைக் காணும் எண்­ணத்­து­ட­னேயே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தனது நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்றார். தமது நல்­லெண்­ணத்தை வெளிக்­காட்டும் வகையில் கடந்த சுதந்­தி­ர­தின வைப­வத்தில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். இந்த பங்­கேற்பு தொடர்­பிலும் பல்­வேறு சர்ச்­சைகள் எழுந்­தி­ருந்­தன. லண்­டனில் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­க­ளினால் மேற்கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது இவர்கள் இரு­வ­ரதும் உரு­வப்­ப­டங்­களும் எரி­யூட்­டப்­பட்டு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.
இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெற்­ற­போ­திலும் கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது யதார்த்­த­பூர்­வ­மான சிந்­த­னை­யுடன் எதிர்­கால நலனைக் கருத்­தில்­கொண்டு தமது போக்கில் உறு­தி­யாக இருப்­பது புல­னா­கின்­றது. இவ்­வாறு கூட்­ட­மைப்பின் தலைமை பயணிக்­கும்­போது வட­மா­காண முத­ல­மைச்சர் மாறு­பட்ட விதத்தில் செயற்­ப­டு­வ­தா­னது கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு பெரும் சங்கடத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.
ஆனாலும் முத­ல­மைச்­சரின் செயற்­பா­டு­க­ளையும் முற்­று­மு­ழு­தாக தவ­றென கூற­மு­டி­யாத சூழலும் காணப்­ப­டு­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்பின் தலைமை ஒரு­நி­லைப்­பாட்­டிலும் வட­மா­காண முத­ல­மைச்சர் வேறொரு நிலைப்­பாட்­டிலும் பய­ணிக்க முடி­யாது. அவ்­வாறு பய­ணித்தால் முரண்­பா­டு­களே மேலும் தலை­தூக்கும். இந்­த­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டையில் ஏற்­பட்­டுள்ள விரிசல் நிலைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாக மாறியிருக்­கின்­றது.
இவ்­வி­டயம் தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலைமை கடு­மை­யாக சிந்­தித்து செயற்­ப­ட­வேண்­டிய நிலை எழுந்­தி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்து செயற்­பட்டே அர­சியல் தீர்­வொன்றை காண­வேண்டும். இதற்­கேற்­ற­வ­கையில் கூட்­ட­மைப்பின் தலை­மையும் வட­மா­கா­ண­சபை நிர்­வா­கமும் செயற்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.
இவ்­வாறு அர­சாங்­கத்­துக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான நிலை­வரம் இருக்­கையில் காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தனை பகிஷ்­க­ரிக்­கு­மாறு தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் திருகோ­ண­ம­லையில் நடை­பெற்ற காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் குறைந்தளவானோரே சாட்சியங்களை அளித்திருந்தனர்.
இவ்விடயமும் கூட்டமைப்பின் தலைமையை அதிருப்திகொள்ளச் செய்துள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் விசாரணையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
உண்மையிலேயே சம்பந்தனின் கருத்து சரியானதாகும். ஆணைக்குழு மீது நம்பிக்கை இருக்கின்றதோ, இல்லையோ சாட்சியங்களை பதிவுசெய்து அதனை ஆவணமாக்க வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் பெருமளவானோர் சாட்சியமளித்தமையினால்தான் அதனைப் பின்பற்றி சர்வதேச விசாரணையொன்று நடைபெறும் சூழ்நிலை உருவானது. எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை உதறித்தள்ளிவிட்டு பின்னர் யோசிப்பதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
இந்த விடயங்களில் சகல தரப்பும் சிந்தித்து பாதிக்கப்பட்ட தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

Post a Comment

0 Comments