Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கர்ப்பிணி தாய்மாருக்கு மாதம் இரண்டாயிரம் வழங்கப்படும்!– அமைச்சரவை பேச்சாளர்

வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 20 ஆயிரம் ரூபா மாதம் 2 ஆயிரம் என்ற கணக்கில் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் முறை திருத்தத்தின் பின்னர், புதிய தேர்தல் நடத்தப்படும். தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறையாக அது இருக்கும்.

கடந்த அரசாங்கத்தில் தினேஷ் குணவர்தன குழு பரிந்துரை தேர்தல் முறைக்கும் அப்பால் சென்ற தேர்தல் முறையாக புதிய தேர்தல் முறை அமையும்.
அரசியலமைப்புத் திருத்ததிற்கு பிறகோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு பின்னரோ பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளரின் அறிக்கை அடுத்த சில தினங்களில் கிடைக்கும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments