Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாடுகளை லொறியில் எடுத்துச்சென்ற நால்வருக்கு விளக்கமறியல்

நெரி­ச­லா­கவும் கால்கள் கட்­டப்­பட்ட நிலை­யிலும் இரண்டு லொறி­களில் 31 எருமை மாடு­களை ஏற்றி வந்த குற்­ற­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்ட 04 பேரையும் எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீத­ிவா­னு­மா­கிய எச்.எம்.எம்.பஸீல் உத்­த­ர­விட்­டுள்ளார்.
வெல்­ல­வா­யவி­லி­ருந்து நிந்­த­வூ­ருக்கு இரண்டு
லொறி­களில் எருமை மாடு­களை ஏற்றி வந்த போதே இந்­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அக்­க­ரைப்­பற்று கல்­முனை பிர­தான வீதியில் வைத்து அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் குழுக்கள் மாடுகள் கொண்டு செல்­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை சோத­னை­யிட்­டுள்­ளனர்.
இதன்­போதே எருமை மாடுகள் நெரி­ச­லா­கவும் கால்கள் கட்­டப்­பட்ட நிலை­யிலும் கொண்டு செல்­லப்­பட்­டதை அவ­தா­னித்த பொலிஸார் குறித்த நபர்­களை கைது செய்­த­தோடு மாடு­க­ளையும் லொறி­யையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.
இந்நபர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் மேற்கண் டவாறு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments