Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மஹிந்த திருகோணமலை செல்கிறார்! – பாடசாலைகளுக்கு விடுமுறை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால், திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 15ற்கும் அதிகமான பாடசாலைகள் இன்றும், நாளையும்  மூடப்படுமென தெரிவிக்கப்படுகிறது. படையினர் தங்குவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த விடுமுறைகளுக்குப் பதிலாக எதிர்வரும் வார இறுதி நாட்களான நவம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறும் எனவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வீதிகளில் முப்படையினரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments