Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி மேரி எலிசபெத் ஓய்வு பெற்றார்

ஈழ­மணித் திரு­நாட்­டிலே மங்கா மகி­மை­பெறு மன்­னா­ரிலே நீர்­வ­ளமும், நில­வ­ளமும் ஒருங்கே அமையப் பெற்ற வயலும், வயல் சார்ந்த நில­மு­மான மரு­த­நி­லத்தால் அலங்­க­ரிக்­கப்­பெற்ற முருங்­க­னிலே 1954ஆம் ஆண்டு மாசித் திங்கள், 24ஆம் நாள் செபஸ்­தியான், செப­மாலை தம்­ப­தி­களின் ஒன்­பது மக்கட் செல்­வங்­களில், கடைக்­குட்­டி­யாக உதித்­த­வரே எமது பெரும் மதிப்­பிற்கும் அன்­பிற்­கு­மு­ரிய அதிபர் அருட்­ச­கோ­தரி மேரி எலி­சபெத் ஆவார். பெற்­றோ­ராலும் சகோ­தர, சகோ­த­ரி­க­ளாலும் மிகவும் அன்­பு­ட னும், பரி­வு­டனும் வளர்க்­கப்­பட்டார்.
கல்விச் செல்வம்
இவர் தனது ஆரம்பக் கல்வி முதல், க.பொ.த. சாதா­ரண தரம் வரை முருங்கன் மகா­வித்­தி­யா­ல­யத்­திலும், க.பொ.த உயர்­தர வகுப்பை மட்­டக்­க­ளப்பு, புனித சிசி­லியா மகா வித்­தி­யா­ல­யத்­திலும் கற்றுத் தேர்ந்தார். கல்வி, கேள்வி, கலை ஞானம் விளை­யாட்டு போன்­ற­வற்றில் மேம்­பட்டுத் திகழ்ந்தார். இவ­ரது கற்றல் சாத­னையின் வெளிப்­பாடு, இவரை யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகக் கல்­விக்­கான வாயிலைத் திறந்­தது. கலைப்­பீட மாண­வியாய் கல்­வி­யிலும், கலை ஈடு­பாட்­டிலும் தனது முத்­தி­ரையைப் பதித்தார். இறு­தியில் இரண்டாம் வகுப்பு மேல்­நி­லைத்­த­ரத்தில் தேறி, கலைப்­பட்­ட­தா­ரி­யானார். கல்­வி­மீ­தான இவ­ரது ஆர்­வத்­தினால் இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பட்­ட­மேற்­ப­டிப்பு டிப்­ளோமா கற்று, திறமைச் சித்­தி­யுடன் சான்­றி­தழைப் பெற்றார்.
உண்மைப் பொருளை உகந்த உள்ளம்
இரட்­ச­கராம் இயே­சுவை உள்­ளத்தில் ஏற்று வாழ்ந்து வந்த இவர், முற்­று­மு­ழு­தா­கவே ஆண்­ட­வ­ருக்கு அருட்­பணி புரிய நாட்டம் கொண்டு முருங்கன் மகா வித்­தி­யா­ல­யத்தில் கற்­கும்­போதே, 1972இல் அப்­போஸ்­த­லிக்க கார்மேல் சபையில் புனி­தத்­துவ துற­வற வாழ்வை ஆரம்­பிக்க இணைந்து கொண்ட இவர் 1976இல் முதல் வாக்­குத்­தத்­தத்­தையும், மட்­டக்­க­ளப்பு, புனித சிசி­லியா மகா வித்­தி­யா­ல­யத்தில் கற்று முடித்த மறு­வ­ருடம் 1981இல் நித்­திய வாக்­குத்­தத்­தத்­தையும் உவந்­த­ளித்தார்.
அப்­போஸ்­த­லிக்க கார்மேல் சபையின் நற்­கொள்­கை­களை மதித்த அருட்­ச­கோ­தரி மேரி எலி­சபெத் அவர்கள், புத்­த­ளத்தில் அமைந்­தி­ருந்த தேற்­றாப்­பளை இல்­லத்­திலும், பின்னர் லுணு­கலை இல்­லத்­தி ­லு­மி­ருந்து தன்­ன­ல­மற்­ற­நி­லையில், பெய­ரையோ, புக­ழையோ விரும்­பாமல் நற்­ப­ணி­யு­டன்­கூ­டிய அருட்­பணி ஆற்­றினார்.
ஆசி­ரி­யப்­ப­ணியில் அக­ம­கிழ்வும், அர்ப்­ப­ணிப்பும்
அறி­யாமை இருள் அகற்றி, அறி­வூட்டும் குற்­ற­மற்ற ஆசி­ரி­யப்­ப­ணியில் அருட்­ச­கோ­தரி எலி­சபெத் அவர்கள், இறை­ப­ணி­யுடன் இணைந்­த­வ­கையில், 1987இல் யாழ்ப்­பாணம், அச்­சு­வே­லியில் தற்­கா­லிக ஆசி­ரி­ய­ராகத் தனது கற்­பித்தல் வாழ்வை ஆரம்­பித்து மாண­வர்­களின் நல்­லா­சா­னாக இடம்­பி­டித்தார். உத்­வே­கமும், பணி­பு­ரியும் துடிப்பும் இந்த இளம் ஆசானை பாட­சாலை சமூ­கத்தின­ரி­டையே இனம்­காட்டி நின்­றது. 1989இல் பண்­டா­ர­வளை, தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் நிரந்­த­ர­பட்­ட­தாரி ஆசி­ரிய நிய­மனம் பெற்று தனது கற்­பித்தல் மேம்­பாட்டை உறுதி செய்தார். பின்னர் 1993இல் இடமாற்றம் பெற்று, சிங்­காரச் சிசி­லி­யாவின் சிறப்­பினைச் சீர்ப்­ப­டுத்தி உன்­ன­தத்­திற்கு இட்­டுச்­சென்ற பண்பால் உயர்ந்த பாச­மிகு அதிபர் அருட்­ச­கோ­தரி எம் டிலெக்ரா அவர்கள் அதி­ப­ரா­க­வி­ருந்த காலப்­ப­கு­தியில், மட்­டக்­க­ளப்பு, புனித சிசி­லியா மகா வித்­தி­யா­ல­யத்தில் காலடி வைத்தார்.
ஆளு­மை­மிகு அதிபர் நிலை
இப்­பா­ட­சா­லைக்காய் உழைத்த அதி­பர்கள் அப்­போஸ்­த­லிக்க கார்மேல் சபை யைச் சேர்ந்­த­வர்­களே. ஓவ்­வொ­ரு­வ­ரது உழைப்பும், நேர்­மையும், ஒழுங்கும், இறை­சீர்­மையும் பாட­சா­லைக்கு வித்­தி­யாசம் வித்­தி­யா­ச­மான புத்­தம்­புது மாற்­றங்­களைக் கொண்டு வந்­தது.
பாட­சாலை அதி­ப­ராகக் கட­மை­யாற்­றிய அருட்­ச­கோ­தரி எம் டிலெக்ரா அப்­போஸ்­த­லிக்க கார்மேல் சபையின் மாகாணத் தலை­வி­யாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு கொழும்பு செல்ல, அருட்­ச­கோ­தரி மேரி எலி­சபெத் 1996இல் தற்­கால அதிபர் பத­வி­யி­ல­மர்ந்து, 1999, ஆனித்­திங்கள் 15ஆம் நாள் வரை பாட­சா­லையைச் சீராய் நிர்­வ­கித்தார்.
பாட­சா­லையே அவ­ரது மூச்சு. மின்னல் பொறி பறப்­ப­துபோல், புதுப்­புது மாற்­றங்கள் தலை­நீட்ட ஆரம்­பித்­தன. 1996ஆம் ஆண்டு ஆனித்­திங்கள் 16ஆம் நாள் நிரந்­தர அதி­ப­ராகப் பணி­யாற்றத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து இளைப்­பாறும் வரை இவ­ருக்­குள்­ளி­ருந்த ஆளு­மையும், பன்­மு­க­நி­லைப்­ப­டுத்­தப்­பட்ட வீரி­யமும் காத்­தி­ரமாய் வெளிப்­பட்­ட­தெ­னலாம்.
புல­மை­மிகு அதி­பரும் புல­மைத்­துவஆற்­று­கையும்
“பெருமை உடை­யவர் ஆற்­றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்” என்­ப­தற்­கி­ணங்க பெருந்­தன்மை உடை­யவர் பிறர் ஆற்­ற­வி­ய­லாத செயல்­களை முறை­யாகச் செய்து முடிப்பர் எனும் பொய்யா மொழி்க்­கி­ணங்க பல்­துறை வித்­த­க­ராக திட்­ட­மி­டு­வதை திட்­ட­மிட்ட கால நேரத்­துக்­குள்­ளேயே முடித்­து­விடும் ஓர் திறன்­மிகு சிற்­பி­யாகத் திகழ்ந்தார் அதிபர் அருட்­ச­கோ­தரி எலி­சபெத்.
கல்வி மேம்­பாட்டில் இவ­ரது தடம்
பாட­சா­லையின் ஆரம்பப் பிரிவு முதல் உயர்­தரம் வரை இவர் கொண்­டி­ருந்த தரி­சனப் பார்வை நாளுக்கு நாள் வெற்­றியாய் வெளிக்­கி­ளம்பி நின்­றது. இவ­ரது கல்வித் திட்­ட­மி­ட­லினால் ஒவ்வோர் வகுப்பும் ஆரோக்­கி­யமாய் உயிர்­பெற்­றன. மாணவர், ஆசி­ரியர் வரவு முனைப்­புடன் உறு­தி­யாக்­கப்­பட்­டது. இதற்­காக பரி­ச­ளிப்பு விழாவில் விசேட பரி­சுத்­திட்­டமும் அமு­லா­னது. மாணவர் இடை­வி­லகல் தடுக்­கப்­பட்­டது. இவற்றின் ஆரோக்­கி­ய­மான வௌிப்­பாட ாய், புலமைப் பரிசில் பரீட்­சையில் சித்­தி­பெறும் மாணவர் எண்­ணிக்கை வரு­டா­வ­ருடம் கூடி­யது. க.பொ.த. சாதா­ரணப் பரீட் ­சையில் அதி­கூ­டி­ய­ளவு மாண­விகள் உயர்­த­ரத்­திற்­கான தகுதி பெறும் நிலை அதி­க­ரித்­தது, க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையில் சித்தி பெறும் வீதம் அதி­க­ரித்­த­துடன் வெவ்­வேறு பட்­டப்­ப­டிப்­புக்­க­ளுக்­காகப் பல்­க­லைக்­க­ழக நுழைவு வீதமும் முன்­னே­றி­யது.
புனித சிசி­லியா பாட­சாலைச் சமூ­கத்­தி­னரை தனிச் சிறப்­பா­ளர்­க­ளாக இனங்­காட்­ட­வேண்டும் நட­வ­டிக்­கையின் ஓர் அம்­ச­மாக ஆசி­ரி­யர்­க­ளுக்­கான சீரு­டை­யையும், மாண­வி­க­ளுக்­கான கருஞ்­சி­வப்­பி­லான சீரு­டை­யையும் முதன்­மு­த­லாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அறி­மு­கப்­ப­டுத்­திய பெருமை எமது அதி­ப­ரையே சாரும். கல்விக் கண்­காட்­சிகள் இடை­யி­டையே நிகழ்த்­தப்­பட்­ட­துடன், மட்­டக்­க­ளப்பில் பல­ராலும் இன்றும் பேசப்­ப­டு­கின்ற மாபெரும் கண்­காட்சி (Education) 2013இல் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
புறக்­கி­ருத்­திய வெளிப்­பாட்­டுக்­கான பின்­புலத் தூண்டல்
கல்விச் செயற்­பா­டு­க­ளுக்கும் மேலாய் ஒவ்வோர் மாண­வரும் ஆசி­ரி­யரும் தமது ஆற்­றல்­களின் ெவளிப்­பா­டு­களைப் பட்டை தீட்­ட­வேண்­டு­மென ஒவ்­வொ­ரு­வ­ரையும் ஊக்­கு­வித்தார். ஆசி­ரி­யர்கள், மாண­வர்­க­ளுக்­கான போட்­டிகள் நடத்­தப்­ப­டு­கின்­ற­போது அநேகர் இதில் பங்­கு­கொண்டு தேசிய, மாகாண, மாவட்ட ரீதி­களில் அநேக பரி­சில்­களைச் சுவீ­க­ரித்­தி­ருக்­கின்­றனர்.
தேசிய பாட­சாலை எனும் மகுடம்
அருட்­செல்வி எலி­சபெத் அவர்கள் நிரந்­தர அதி­ப­ராகி பாட­சாலைக் கட்­ட­மைப்பை உயிரூட்டிப் பேணி­யதன் விளை­வாக, இரு வரு­டங்­க­ளி­லேயே 2001இல் புனித சிசி­லியா பெண்கள் மகா வித்­தி­யா­லயம் தேசிய பாட­சா­லை­யாகத் தரம் உயர்த்­தப்­பட்­டது. இவ்­வு­யர்ச்­சிக்காய் இவர் காட்­டிய வேகமும் விவே­கமும் சொற்­களில் விப­ரிக்­க­மு­டி­யா­த வை.
பாட­சாலை பௌதீக வளங்­களின் அபி­வி­ருத்தி
இவ­ரது காலத்தில் கட்­ட­டங்கள் ஒவ்­வொன்றாய் உருப்­பெற்­றெ­ழும்­பின. பாட­சாலைச் சமூ­கத்­தி­னரின் ஆரோக்­கி­ய­மான கற்றல் கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்காய் வகுப்­ப­றைகள் செழு­மையாய்க் காணப்­ப­ட­வேண்­டு­மென்­பதில் ஆர்வம் காட்­டினார். கொய்யா வளவு என அழைக்­கப்­பட்டு பாட­சா­லையின் பின்­புறம் காணப்­பட்ட பெரி­ய­தொரு நிலப்­ப­ரப்பைப் பாட­சா­லைக்­கெனச் சுவீ­க­ரிக்க முன்னாள் அதிபர் அருட்­ச­கோ­தரி டிலெக்ரா எடுத்த அரும்­பெரும் முன்­னெ­டுப்பை அவ­ரது சேவைக்­காலம் முடிந்­ததும் பத­விக்கு வந்த அருட்­ச­கோ­தரி எலி­சபெத் அரும்­பா­டு­பட்டு தேவை­யான இடங்­களில் இதற்­கான அனு­ம­தியைப் பெற்று இப்­பா­ட­சா­லைக்­கென உரித்­தாக்­கி­ய­மை­யா­னது வர­லாற்றில் ஒரு சாத­னை­யாகும். இரண்டு மாடி­களும், மூன்று மாடி­க­ளு­மென ஆங்­காங்கே கட்ட­டங்கள் இவ­ரது ஆளு­மையைப் பறை­சாற்றி நிற்­கின்­றன.
மிகச்­சி­றந்த அதிபர் எனும் உயர் விருது
அதிபர் அருட்­ச­கோ­தரி மேரி எலி­சபெத் நாளுக்கு நாள் வெளிக்­காட்­டிக்­கொண்­டி­ருந்த நிர்­வாகத் திற­மையும் ஆளு­மைத்­தி­றனும் மக்கள் மத்­தியில் பெற்­றி­ருந்த நன்­ம­திப்பும் அதி­க­ரித்­த­நி­லையில் 2010இல் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து அவ்­வ­ரு­டத்­திற்­கான மிகச்­சி­றந்த அதிபர் எனும் உயர்­வி­ருதைப் பெற்­றுக்­கொண்டார்.
விளை­யாட்டுத் துறையும் அதி­பரும்
தேசிய, மாகாண, மாவட்ட ரீதி­யி­லான பல விளை­யாட்டுப் போட்­டி­க­ளிலும். புனித சிசி­லியா முத்­திரை பதிக்க எமது அதிபர் காட்­டிய ஆர்வம் அளப்பரி­யது. வலைப் பந்­தாட்டம், ஓட்டப் போட்­டிகள், கிரிக்கட், கராத்தே, மைதானப் போட்­டிகள் என பல­வற்­றிலும் எமது மாண­விகள் பங்­கு­கொள்ள ஊக்­கு­வித்து பல பயிற்­சி­யா­ளர்­களை அழை த்து பயிற்­சியும் வழங்­கி­யுள்ளார்.
மட்­டக்­க­ளப்பு வின்சன்ட் மகளிர் உயர்­தர பாட­சா­லைக்கும், புனித சிசி­லியா மகளிர் கல்­லூ­ரிக்­கு­மான வரு­டாந்த கிரிக்கட் போட்­டி­களில் எமது பாட­சாலை கணி­ச­மா­ன­ளவு வெற்றிக் கிண்­ணத்தைச் சுவீ­க­ரித்துள்ளது.
கலை­மி­ளிர்வும் அருட்­­கோ­­ரியும்
அருட்­ச­கோ­தரி எலி­சபெத் ஒரு பிறவிக் கலைஞர். அவர் பிறந்த குடும்­பமே ஒரு கலைக்­கு­டும்பம். புல தரப்­பட்ட இசைக் கரு­வி­களை இயக்கும் ஆற்றல் இவ­ருக்­குண்டு. ஓர்கன் இசைப்­பதில் இணை­யற்ற இன்பம் காண்­பவர். வில்­லிசை, நாட்­டுக்­கூத்து என இவர் சிறு­வ­ய­தி­லி­ருந்தே கொண்­டி­ருந்த கலை­யார்வம் பாட­சா­லை­யிலும் இவற்றின் கலை மிளிர கால்­கோ­ளாக இயங்­கினார். 1999இல் பொதிகைத் தென்­றலும், 1995இல் பிருந்­தா­வ­னமும், பாட­சா­லையின் 125ஆவது நிறை­வின்­போது இயற்­றமிழ், இசைத்­தமிழ். நாட­கத்­தமிழ் நிகழ்வும், அன்னை வெரோ­னிக்­காவின் நூற்­றாண்டு நினை­வாக 100 குரல்கள் நிகழ்வும், ஆங்­கிலப் பாடல்­க­ளி­லான ஈடு­பாட்டை ஊக்­கு­வித்­த­மையும், மேலைத்­தேய பாண்ட் வாத்­தியக் குழுக்­களைக் கன­தி­ய­டையச் செய்­த­மை­யுடன், கீழைத்­தேய வாத்­தி­யக்­கு­ழுவை பாட­சா­லையில் ஆரம்­பித்­த­மையும், பரத நாட்­டியம், கர்­நா­டக சங்­கீதம் போன்­ற­வற்றின் மேம்­பாட்­டுக்காய் உழைத்­த­மையும், நாட­கத்­துறை வளர்ச்­சிக்­கான கருத்­ த­ரங்­கு­க­ளும் ­உள்­நாட்டு, வெளிநாட்டு வள­வா­ளர்­களை வர­வ­ழைத்து இசைக்­க­ரு­வி­களில் மாண­வி­களை சிறப்­ப­டைய வழி­வ­குத்­த­மையும் இவ­ரது கலை ஆர்­வத்­திற்குச் சில எடுத்­துக்­காட்டுக்களாகும்.
சமூகப் பணியில் அக­­கிழ்ந்த அதிபர்
எவ­னு­டைய ஆத்மா ஏழை­க­ளுக்­காக அழு­கி­றதோ அவனே மகாத்மா துய­ருற்ற, நிர்க்­க­தி­யான மக்­க­ளுக்கு உத­வு­வதில் அருட்­ச­கோ­தரி எலி­ச­பெத்­துக்கு நிகர் அவரே. சம­கா­லத்தில் எதற்­குமே பெய­ரையும் புக­ழையும் விரும்பும் இவ்­வு­லகில் எமது அதிபர் வலது கை கொடுப்­பதை இடது கை அறி­யா­வண்ணம் இவ­ரி­ட­மி­ருந்து உதவி பெற்றோர் எண்­ணி­லடங்­கா­த­வர்கள்.
ஆழிப் பேர­லை­யா­கட்டும், இடர்­நிலை துன்­புறும் மக்­க­ளா­கட்டும் அனை­வ­ரையும் நேசிக்கத் தெரிந்த நல்­லுள்ளம் அவ­ரு­டை­யது.
சாத­னை­களின் நெறி­யாளர்
சாதனை படைக்கப் பிறந்­தவர் அருட்­ச­கோ­தரி எலி­சபெத். அவர் துணிந்து காலடி வைத்த பாதையில் அநேகம். வெற்றிக் கொடி­க­ளுடன் பாட­சா­லையை நகர வைத்­தவர் அவர். தமிழ்த்­தினப் போட்­டி­களில் 2010இலி­ருந்து தொடர்ச்­சி­யாக மாகா­ணத்­திற்­கான விரு­தினை பெற்று வரு­வதும், கல்வி அமைச்­சினால் நடத்­தப்­பட்ட உற்­பத்­தித்­திறன் போட்­டியில் 2010/11இல் விசேட விருதும், 2012/13இல் அதி விசேட விருது பெற்­ற­மையும், புனித சிசி­லியா பெண்கள் மகா வித்­தி­யா­ல­யத்தை கல்­லூ­ரி­யாக உயர் த்­தி­ய­மையும்.
AAT நிறு­வ­னத்­தினால் பாட­சாலை வரு­டாந்த அறிக்கை மற்றும் கணக்­க­றிக்­கை­க­ளுக்­கான போட்­டியில் 2009இலி­ருந்து மாவட்­ட­ரீ­தியில் முத­லி­டத்­தையும், 2013இல் மாகா­ண­ரீ­தியில் முத­லி­டத்தை பெற்­ற­மையும், வலயக் கல்வி அலு­வ­ல­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட உள்­ளக மேற்­பார்­வையின் மேம்­பாட்­டுக்காய் முத­லிடம் பெற்­ற­மையும், க.பொ.த. சாதா­ரண, உயர்­தர பரீட்சை முடி­வு­க­ளின்­போது சில வரு­டங்­களில் மாவட்­ட­ரீ­தியில் முதன்மை இடங்­களில் வரு­கின்­ற­மையும், சிங்­கள தினப் போட்­டியில் தமிழ் மாண­வ­ருக்­கான போட்­டிக்காய் முத­லிடம் பெற்று ஜனா­தி­பதி விருது பெற்­ற­மையும், 2011, 2012 ஆம் வரு­டங்­களில் க.பொ.த. சாதா­ரண பரீட்­சையில் மாகாண மட்­டத்தில் பல முக்­கிய பாடங்­க­ளுக்காய் “Best Performing School” எனும் சாதனை படைத்­ததும், கல்வி அமைச்சும் மிட்­சுயி சீமெந்து நிறு­வ­னமும் இணைந்து நடத்­திய வினாடிவினா போட்டிக்காய் முதலிடம் பெற்று ஒரு இலட்சம் பரிசுடன் திரும்பியமையும் எமது அதிபர் அருட்சகோதரி எலிசபெத்தின் ஊக்கத்துக்கும் மாணவர் ஆசிரியர்கள்பால் வழங்கிநிற்கும் ஊக்கத்திற்கும் கிடைத்த பரிசுகளேயாகும்.
ஆன்மீகத்துடன் தவழ்ந்துவந்த ஆளுமைத்தாய்
ஆன்மீகம் பற்றி மகாத்மா காந்தி கூறு கையில்,
சமயத்தைப் போதிக்க வேண்டாம், வாழ்ந்து காட்டுங்கள் எனும் கூற்றுக் கிணங்க பாடசாலையும் சமூகமும் அருட்சகோதரிகளின் ஆன்மீக வெளிப் பாட்டை அவரது நாளாந்த செயற்பாடு களில் ஆரோக்கியமாய்க் கண்டன. முன் மாதிரியான நிர்வாகத் திறன் கொண்ட அவர் எங்கு சென்றாலும் தனது முத்திரை பதிப் பார்.
நீண்ட நாளின் ஆளுமைப் பயணம் முருங்கனில் தொடர்கிறது
இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புனித சிசிலியா பெண்கள் கல்லூ ரியின் ஆளுமைமிகு அதிபர் அருட்சகோதரி எலிசபெத் இவ்வாண்டு மாசித் திங்கள் 23ஆம் நாள் இளைப்பாறி தற்போது மன்னார், அடம்பன் கார்மேல் இல்லத்தில் குரு மேலாளராக தனது ஆளுமையின் மற்றுமோர் வடிவினை வெவ்வேறு கோணங்களில் சாதித்து வருகின்றமை மகிழ்வைத் தருகின்றது. இங்கர் சால் எனும் அறிஞன் கூறுவதுபோல உனது நல்ல செயல்களின்மூலம் பிறருக்கு வழிகாட்டியாயிரு எனும் கூற்றை அருட் சகோதரி மெரி எலிசபெத் வாழ்ந்தே காட்டிக் கொண்டிருப்பவர்.
இன்னும் அவரிடம் நிறையவே உண்டு. அவரது அவ்வாளுமையின் வெளிப்பாடு நிச்சயமாய் அவ்வப்போது வெளிக்கிளம்பிவரும் இது நிச்சயம்.

Post a Comment

0 Comments