Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுய நிர்­ணய உரி­மை­யோடு கூடிய ஒரு தீர்வு என்­ப­துதான் முஸ்­லிம்­க­ளுக்கு பஷீர் சேகு­தாவூத் தெரி­விப்பு

இணைந்த வடக்கு கிழக்கு மாகா­ணத்­திலே, சரி­யான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்­கின்ற அடிப்­ப­டை­யி­லான சுய நிர்­ணய உரி­மை­யோடு கூடிய ஒரு தீர்வு என்­ப­துதான் முஸ்­லிம்­க­ளுக்கு வேண்டும்

 எதிர்­கால அர­சியல் வியூ­கத்தை வகுப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் தொடர்ந்­தேர்ச்சி யான பேச்சுவார்த்­தையில் ஈடு­பட ஒப்புக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்தப் பேச்­சு­வார்த்­தை­யிலே இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான விட­யங்­களைத் தெளிவாக பேசிக் கொள்ள வேண்டும் என முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.
மீரா­கேணி பஷீர் சேகு­தாவூத் வித்­தி­யா­ல­யத்தில் 50 இலட்சம் ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள கட்­ட­டத்­திற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அதிபர் ஏ.எல்.பாறூக் தலை­மை­யில இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்..
இன்று முக்­கி­ய­மான அர­சியல் சூழ்நிலை இலங்­கையில் நில­வு­கி­றது. ஊவா மாகாண சபைத் தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் எல்லா அர­சியல் கட்­சி­களும் துள்ளிக் குதித்து எழுந்­துள்­ளன.
எல்லா ஊட­கங்­களும் ஊவா மாகாண சபைத் தேர்தல் அர­சுக்­கான ஒரு சிவப்புச் சமிக்ஞை என்று கூறுகின்றன.
எனது பார்­வையில் இது அர­சுக்கு மாத்­திரம் சிவப்பு சமிக்ஞை அல்ல, இது எதிர்க் கட்­சி­க­ளுக்கும் ஒரு சிவப்பு சமிக்­ஞைதான். கடந்த தேர்­தலை விட இந்தத் தேர்­தலில் அர­சாங்­கத்­திற்கு வாக்­குகள் குறைந்­தி­ருப்­பது சிவப்பு சமிக்ஞை என்றால், கடந்த காலங்­களில் இருந்த பிரி­வினை போல எதிர்க் கட்­சிகள் தொடர்ந்து பிரி­வி­னையில் இருந்தால் அது உங்­க­ளுக்கும் ஆகாது என்று எதிர்க்­கட்­சி­களைப் பார்த்துச் சொல்­கின்ற ஒரு சிவப்பு சமிக்­ஞையும் கூட என நான் கரு­து­கின்றேன்
எனவே, எதிர்க்­கட்­சி­களில் பிர­தான இடத்தில் இருக்­கின்ற ஐ.தே.க. இதனைக் கணக்கில் எடுக்­க­வில்லை போல்தான் தெரி­கி­றது.
அதன் தலைவர் ரணில் விக்­கி­ர­மசிங்க அதனைப் பொருட்­ப­டுத்­த­வில்லை. ஜே.வி.பி. தலை­வரும் அதன் முக்­கிய உறுப்­பி­னர்­களும், சரத் பொன்­சே­கா­வுக்­கு­ரிய கட்­சியும் தங்­க­ளுக்­கு­ரிய இந்த மிகப் பெரிய சிவப்பு விளக்கு சமிக்­ஞையை பொருட்­ப­டுத்­த­வில்லை என்­பது போலதான் தேர்­த­லுக்குப் பின்­ன­ரான அவர்­க­ளது செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.
உண்­மை­யி­லேயே ஊவா மாகாண சபைத் தேர்தல் இந்த நாட்­டி­னு­டைய ஒட்டு மொத்த ஜன­நா­யக அர­சி­யலின் தேர்தல் நடை­மு­றை­களை பிழை­யா­னது என்று காட்­டு­கின்ற சிவப்பு விளக்கு என்­பதைப் புரிந்து கொள்­ளு­கின்ற போது மாத்­தி­ரம்தான் எதிர்­கா­லத்­திலே ஒரு உருப்­ப­டி­யான ஜன­நா­யக அர­சியல் முறை­மையைக் கொண்­டு­வர முடியும்.
எல்லா இனங்­க­ளையும் சமத்­து­வ­மாக மதிக்­கின்ற எல்­லோரும் இலங்­கை­யர்கள் என்­கின்ற யாப்புத் திருத்தம் வந்­தால்தான் இலங்கை இனப்­பி­ரச்­சி­னையின் சகல வடி­வங்­களும் ஒட்டு மொத்­த­மாகத் தீர்த்து வைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்­படும். அந்த அடிப்­ப­டை­யிலே பார்க்­கின்­ற­போது இன்று நல்ல சகுனம் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.
முக்­கி­ய­மாக சிறு­பான்மைக் கட்­சி­க­ளான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் தொடர்ந்­தேர்ச்­சை­யாக பேச்சு வார்த்­தையில் ஈடு­பட ஒப்புக் கொண்­டி­ருக்­கின்­றன.
இந்தப் பேச்­சு­வார்த்­தை­யிலே இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான விட­யங்­களைத் தெளிவாகப் பேசிக் கொள்ள வேண்டும் என்­பது என்­னு­டைய அபிப்­பி­ரா­ய­மாகும்
இந்த இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யங்­க­ளிலே தமி­ழர்­க­ளு­டைய அடிப்­படை அபி­லாஷை என்­பது வடக்கு மாகா­ணமும் கிழக்கு மாகா­ணமும் இணைந்த ஒரு அலகு. அந்த அல­கிற்­குள்ளே தங்­க­ளுக்­குள்ள உள்­ளக சுய நிர்­ணய உரிமை ஐக்­கி­யப்­பட்ட இலங்­கைக்குள் நின்று கொண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகா­ணத்­திலே, சரி­யான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்­கின்ற அடிப்­ப­டை­யி­லான சுய நிர்­ணய உரி­மை­யோடு கூடிய ஒரு தீர்வு என்­ப­துதான் முஸ்­லிம்­க­ளுக்கு வேண்டும்.
இந்தத் தீர்வு சம்­பந்­த­மாக முஸ்லிம் மக்கள் தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான அனு­ச­ர­ணையைக் கொடுக்­கின்ற வகை­யிலே தமிழ் தேசியக் கூட்­ட­மை­ப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ரஸுக்கும் இடை­யிலே இதய சுத்­தி­யோடு பேச்­சு­வார்த்தை அமைய வேண்டும்.
இதே போன்று வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகா­ணத்­திலே வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளுக்குச் சமாந்­த­ர­மாக உரி­மை­யோடு வாழ நினைக்­கின்ற முஸ்லிம் மக்­களின் அபி­லா­ஷையும் கவ­னத்தில் எடுக்­கப்­பட வேண்டும்.
எனவே இந்த இரண்டு விட­யங்­க­ளையும் முன்­னி­றுத்­தி­ய­தாக முஸ்லிம்களுக்கான தீர்வை தமிழ்த் தரப்பின் மேசையிலே போட்டு அலசி ஆராய்ந்து ஒத்திசைந்து எடுக்கின்ற அதன் இறுதி வடிவத்தை சிங்களப் பெரும்பான்மை அரச மேசை யிலே போடவேண்டும்.
அப்படி தமிழரும் முஸ்லிம்களும் இணக் கப்பாட்டுக்கு வந்து ஒருமித்த குரலுடன் சிங்களப் பெரும்பான்மை அரசிடம் கோரிக்கை வைக்கிற போதுதான் இனப் பிரச்சினைக்கான தீர்வு நீடித்து நிலைத்து நிற்கும் என்றார்.

Post a Comment

0 Comments