Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்தில்

இன்னும் ஆறு மாத காலத்தில் நாட்டு அர­சி­யலில் ஏரா­ள­மான மாற்­றங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் இரண்டு அல்­லது மூன்று வாரங்­களில் புதிய பாதையில் பய­ணிக்க எத்­த­னித்­துள்­ளது. தேவை­யேற்­பட்டால் தமி­ழர்­களின் சாத்­வீகப் போராட்­டத்தில் இணைந்து கொள்­ளவும் தயா­ரா­க­வுள்­ளது என சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் ஹஸ­ன்அலி எம்.பி.தெரி­வித்தார்.
முல்லை முஸ்­ரிபா எழு­திய ‘சொல்லில் உறைந்­து­போதல் ‘நூலின் வெளி­யீட்டு விழா நேற்று மாலை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க மாவத்­தை­யி­லுள்ள பாத்­திமா முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரியின் ‘ரிபாய் ஹாஜியார்’ மண்­ட­பத்தில் நடை­பெ­ற்­றது.நிகழ்வில் அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
ஹஸ­ன்அலி எம்.பிதொ­டர்ந்து உரை­யாற்­று­கையில், பதி­னெட்­டா­வது அர­சியல் திருத்தம் பற்றி பலரும் அதி­ருப்­தியில் பேசு­கின்­றனர்.அதற்கு நாங்­களும் ஆத­ரவு வழங்­கி­யுள்ளோம். அது தொடர்பில் எமது கட்­சியின் தலைவர் ‘கண்­ணைத்­தி­றந்து கொண்டு படு­கு­ழியில் விழுந்­த­தாக’ ஏற்­க­னவே குறிப்­பிட்­டுள்ளார்.அதே­போன்று ‘கண்ணை மூடிக்­கொண்டு படு­கு­ழியில் விழுந்­த­தாக’ நான் குறிப்­பிட்­டுள்ளேன்.சந்­தர்ப்ப சூழ்­நி­லையின் கார­ண­மா­கவே இவ்­வா­றான விட­யங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க வேண்­டி­வந்­தது.
அர­சாங்கம் எமக்­குத்­தந்த பொய்­வாக்­கு­று­தி­களை வெளிப்­ப­டை­யாகச் சொல்ல முடி­யாது.அதனை நிறை­வேற்­ற­வு­மில்லை.இனியும் நிறை­வேற்­று­வார்கள் என்று எதிர்­பார்க்­கவும் முடி­யாது.பதி­னெட்­டா­வது திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கி­ய­போது அது தொடர்பில் கட்­சிக்குள் கடு­மை­யாக முரண்­பட்­டுக்­கொண்­டவன் நான்.
மு.கா.இக்­கட்­டான அர­சியல் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது.எனினும் மடத்­த­ன­மான அர­சியல் செய்­ய­வில்லை. கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து முத­ல­மைச்சுப் பத­வியைப் பெற்­றுக்­கொண்டு ஆட்­சி­ய­மைத்­தி­ருக்­கலாம் என குறிப்­பி­டு­கின்­றனர்.எமது பிரச்­சினை அது­வல்ல. கிழக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு பதி­னொரு ஆச­னங்களும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு ஏழு ஆச­னங்­களும் கிடைத்­தன.இந்த பதி­னெட்டு ஆச­னங்­களை வைத்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாது.ஆட்­சி­ய­மைக்க பத்­தொன்­பது ஆசனம் தேவை.எனவே அந்த ஒரு ஆச­னத்­திற்­கு­ரிய எந்த தரப்பும் அப்­போது எம்­மோடு பேச­வில்லை.
மேலும் நாம் கிழக்கில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தி­ருந்தால் ஏனைய மாவட்­டங்­க­ளி­லுள்ள முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள்.ஆகவே வெளியில் உள்ள முஸ்­லிம்­களை பாது­காப்­ப­தற்கு அர­சாங்­கத்­துடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க வேண்­டிய தேவை­யு­மி­ருந்­த­து.எனினும் அந்த எதிர்­பார்ப்பும் இன்று பொய்த்து விட்­டது.
ஊவா மாகா­ண­சபைத் தேர்­தலில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை அர­சாங்­கத்­துடன் இணைந்து போட்­டி­யிட வைப்­ப­தற்கு முயற்சி செய்­தார்கள்.அதி­லி­ருந்து கட்­சியைக் காப்­ப­தற்கு நான் இரண்டு நாள் யாரும் என்னைக் கண்­டு­கொள்ள முடி­யாத வகையில் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தேன்.அவ்­வாறு செய்­தா­வது கட்­சியைக் காப்­பாற்­றினேன்.பதுளை மாவட்ட முஸ்­லிம்­கள்தான் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸையும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸையும் இணைந்து போட்­டி­யிட வைத்­தார்கள்.தேர்­தலின் பின்னர் இந்த கூட்­டணி மூலம் தெரிவு செய்­யப்­படும் உறுப்­பினரை 25 உல­மாக்­களைக் கொண்ட குழு­வுக்கே பொறுப்பு சாட்டும் திட்டம் அங்கு நடந்­துள்­ளது.தெரிவு செய்­யப்படும் உறுப்­பி­ன­ருக்கு கிடைக்கும் நிதி­கூட அந்த குழு­வா­லேயே கையா­ளப்­ப­ட­வுள்­ளது.
ஆனாலும் பத்­தி­ரி­கை­களில் அந்தக் கூட்டணிக்கெதிராக பலவாறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.அந்த கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை குறைப்பதற்கான சதி என்றும் குறிப்பிடுகின்றனர்.நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பல சூழ்ச்சிகளை அரங்கேற்றியது ஐக்கிய தேசியக் கட்சிதான். முஸ்லிம்களை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்றதும் ஐக்கி யதேசியக்கட்சிதான் என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments