Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஏறாவூர் நகர சபையால் புறக்கணிக்கப்படும் தமிழர் பகுதிகள்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஏறாவூர் நகர சபைக்குட்­பட்ட தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகு­திகள் அடிப்­படை வச­திகள் வழங்­கப்­படாத நிலையில் முற்­றாகப் புறக்­க­ணிக்­கப்பட்டு வரு­வது தெரிய வந்­துள்­ளது.
1952 ஆம் ஆண்டில் கிராம சபை­யா­கவும் பின்னர் பட்­டின சபை­யா­க­வு­மி­ருந்த ஏறாவூர் இன்று நகர சபை­யா­கத்­த­ர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளது. சுமார் பத்­தா­யிரம் தமிழ் மக்கள் வாழும் இந்த நகர சபையின் எல்­லைக்குள் 4 ஆம் மற்றும் 5ஆம் குறிச்­சி­களில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்­கின்­றனர்.
1952 ஆம் ஆண்­டுக்குப் பின் இத்­த­மிழர் வாழும் பகு­தி­க­ளி­லுள்ள வீதி­க­ளெ­துவும் செப்­ப­னி­டப்­ப­டா­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. கிராம சபை­யாக இருந்த காலத்தில் அமைக்­கப்­பட்ட மண் (கிரவல் ) வீதி­களே இன்­று­முள்­ளன. ஏறாவூர் நகர சபைக்­குட்­பட்ட ஏனைய பகு­தி­களின் வீதிகள் செப்­ப­னி­டப்­பட்டு தார் வீதி­க­ளாக மாற்­றப்­பட்டு நகர சபையால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரும் நிலையில் தமிழர் வாழும் பகு­திகள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வது ஏன் என்ற வினா­வுக்கு விடை காணப்­பட வேண்டும்.
4 ஆம் குறிச்­சி­யி­லுள்ள தாமோ­தரம் வீதி, தோம்­புதோர் வீதி, கந்­தப்­போடி வீதி, தாம­ரைக்­கேணி வீதி, தம்­பா­பிள்ளை வீதி, நல்­ல­தம்­பியார் வீதி, கிராமக் கோட்டு வீதி, பன்­னிச்­சை­யடி வீதி, பெரி­ய­தம்­பிரான் வீதி, கோயி­லடி வீதி, எல்லை வீதி உட்­பட பதி­னெட்டு வீதி­களும் அதேபோல் 5 ஆம் குறிச்­சி­யி­லுள்ள பாட­சாலை வீதி, காளி கோயில் வீதி, பிள்­ளையார் கோயில் வீதி, எல்லை வீதி, சித்தி விநா­யகர் வீதி, மூங்­கி­லடி வீதி, லக்கி வீதி, செல்­ல­தம்பி வீதி உட்­பட பன்­னி­ரெண்டு வீதி­க­ளு­மாக முப்­பது தமிழர் வாழும் பகு­தி­க­ளி­லுள்ள வீதிகள் எந்­த­வொரு அபி­வி­ருத்­தியும் இன்றி புறக்­க­ணிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளமை எவ­ராலும் கண்­டு­கொள்­ளப்­ப­டா­துள்­ளது.
தமிழ் பகு­தி­யி­லுள்ள குறித்த வீதி­க­ளுக்கு வீதி விளக்­குகள் கூட வழங்­கப்­ப­டா­துள்­ளமை தெரிய வந்­துள்­ளது. சோலை வரியை தவ­றாது அற­விடும் ஏறாவூர் நகர சபை தனது நிர்­வாக எல்­லைக்குள் உள்ள தமிழர் வாழும் பகு­தி­களைக் கண்டு கொள்­ளா­தி­ருப்­பது இன­வா­தமா என்று கூட எண்ணத் தோன்­று­கின்­றது. 1990இல் இப்­ப­கு­தியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அன்­றைய அரசின் ஆத­ர­வா­ளர்­களால் இடம்­பெ­யரச் செய்­யப்­பட்­ட­மையும் பதி­வா­கி­யுள்­ளது. தற்­போதும் கூட அன்று இன­வெ­றி­யர்­களால் வெளி­யேற்­றப்­பட்ட தமிழ் மக்­களில் பலர் தமது சொந்த இடங்­களில் மீள் குடி­யேற்றம் செய்யப்­ப­டாத நிலையும் தடங்­க­லேற்­ப­டுத்தும் நிலையும் தெரியவந்­துள்­ளது.
விபு­லா­னந்தா வித்­தி­யா­லயம் மற்றும் தமிழ் மகா வித்­தி­யா­லயம் ஆகிய இரு தமிழ்ப் பாட­சா­லைகள் ஏறா­வூரில் இயங்கும் அதே­வேளை 1871 இல் சிரேஷ்ட தமிழ் கலவன் பாட­சாலை என்று ஆரம்­பிக்­கப்­பட்ட தமிழ்ப் பாட­சாலை 1977 இல் தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து அகற்­றப்­பட்டு இன்று அலிகார் தேசிய பாட­சாலை என்ற பெயரில் இயங்கி வரு­வதும் குறிப்­பி­டத்­தக்­கது. காளி கோயில் வர­சித்தி விநா­யகர் கோயில் பத்தி­ர­காளி அம்மன் கோயில் உட்­பட பல கோயில்கள் இப் பகு­தியில் உள்­ளன.
ஏறாவூர் நகர சபைக்­குட்­பட்ட தமிழர் பகுதிகள் வீதிக்­கட்­ட­மைப்பு, மின்­சார வசதி உட்­பட பல அடிப்­படைத் தேவைகள் வழங்­கப்­ப­டாது புறக்­க­ணிக்­கப்­ப­டு­வது தொடர்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ்ப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கவனம் ஈர்க்­கப்­ப­டாமை கவ­லைக்­கு­ரி­யது. மீள்­கு­டி­யேற்­றப்­பி­ரதி அமைச்­சரும் மட்டக்­க­ளப்பு மாவட்­டத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்தும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் தமிழர் அல்­லாத பகு­தி­க­ளுக்குக் கிடைக்கும் பாரிய அபி­விருத்­திகள் தமது பகு­தி­க­ளுக்குக் கிட்டாமை குறித்து அப்­ப­குதி மக்கள் ஆதங்கம் வெளி­யி­டு­வ­தைத்­த­விர எதுவும் செய்ய முடி­யா­த­வர்­க­ளா­யுள்­ளனர்.
அறு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாகப் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரும் ஏறாவூர் தமிழர் பகு­திக்கு உரிய உரித்­தான அடிப்­படை வச­திகள் எப்­போது வழங்­கப்­படும் என்­பது புரி­யா­த­வொன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. நாடு பல்­வேறு அபி­வி­ருத்­தி­களைக் கண்டு வரு­கின்­றது.
மட்­டக்­க­ளப்பு மாவட்டம் பாரிய அபி­வி­ருத்­தி­களைக் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களைப் பெற்­றுள்­ளது என்று பிர­சா­ரப்­ப­டுத்­தப்­பட்டு வரும் இந்­நாட்­களில் அவை­யெல்லாம் ஏற்க முடி­யாத பொய்கள் என்­பதை மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழர் பகு­தி­களின் உண்மை நிலை­மையை தெளி­வாக வெளிப்­ப­டுத்­து­கின்­றன. அதற்கு தக்க எடுத்­துக்­காட்டாக ஏறாவூர் நகர சபைக்­குட்­பட்ட தமிழ் மக்கள் வாழும் பகு­திகள் விளங்­கு­கின்­றன.
நகர சபை எல்­லைக்குள் வாழும் சகல மக்­க­ளுக்கும் பணி­யாற்ற வேண்­டிய ஏறாவூர் நகர சபை தனக்­கு­ரிய பொறுப்­புக்­களைத் தட்­டிக்­க­ளிப்­பது மனி­தா­பி­மா­னத்­திற்­குப்­புறம்­பான ஜன நாயகக் கோட்­பாட்டை மீறும் அநா­க­ரிக செயற்­பாடு என்­பது புரிந்து கொள்­ளப்­பட வேண்­டிய ஒன்று. நக­ர­சபையால் வழங்­கப்­பட வேண்­டிய வீதி சீர­மைப்பு மின்­சார இணைப்பு நீர் மற்றும் சுகா­தார வச­திகள் தாம­த­மின்றி தடை­யின்றி ஏறாவூர் தமிழர் பகு­தி­க­ளுக்கும் கிட்ட வழி வகை செய்யப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments