Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சம்பந்தருக்கு கொடும்பாவி எரித்த சம்பவம் மகிந்த அரசுக்கு மகிழ்சியான விடயம்! - பா.அரியநேத்திரன்,பா.உ

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு யெனிவா ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான எமது புலம்பெயர் மக்களால் மேற்கொள் ளப்பட்ட கவன ஈர்ப்புபோராட்டம் காலத்தின் தேவையானவிடயம்.ஆனால் அங்குள்ள ஒருசிலரினால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்ட சம்பவம் மிகுந்தகவலையையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழின அழிப்புக்கான நீதி கேட்டுத்தான் ஈழத்தில் இன்று வடகிழக்கு தமிழர்களுக்கான அரசியல் பலமாய் ஐனநாயகரீதி யாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு செயல்படுகிறது அதன் தலைவராகவுள்ள சம்பந்தன்ஐயாவை தமிழ்தேசியகூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் அனைத்துக்கட்சித்த லைவர்கள்மட்டுமன்றி வடகிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுள்ளனர்.
இதைவிடவும் புலம்பெயர்மக்களும் ஏற்றுள்ளனர் இந்நிலையில் அவரை அவமதிக்கும் வித்த்தில் கொடும்பாவி எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலரினால் எரிக்கப்பட்டதானது இலங்கைஅரசுக்கு மகிழ்சியான விடயம் மட்டுமல்ல இலங்கைஅரசை காப்பாற் றும் விடயமாகவும் அமைந்துவிடும்.
தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவரை அவமானப்படுத்துவது அதில் அங்கம் வகிக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் சகல வடமாகாணசபை உறுப்பினர்களையும், கிழக்குமாண த.தே.உறுப்பினர்களையும் பிரதேசசபை மக்கள்பிரதிநிதிகளையும் த.தேகூ,அங்கத்துவ கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகவே அமைந்துவிடும், இதைவிடவும் கிழக்குமாகாணத்தில் பிரதேசவாதம் பேசி அரசியல்செய்யும் எட்டப்பர்களுக்கு வாய்ப்பாகவும் அமையம்.
சம்பந்தரை விடவும் மிகமோசமான துரோகத்தனத்தை செய்யும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் தமிழ் தேசிய முத்திரையுடன்தான் ஈழமண்ணில் இருந்து அரசியல் செய்கிறார்கள் அவ்வாறானவர்களை விட சம்பந்தர் எவ்வளவோ மேலானவர் இன்று சரியோ பிளையோ சர்வதேசம் மதிக்கும் ஒரு தலைவராக கருதப்படும் அவரை தமிழ் மக்களாகியநாம் அவமதிப்போமானால் அதுஎதிரிக்கு வாய்பாக அமைந்துவிடும்,
முள்ளிவாய்கால் அவலம் நேர்ந்து இலட்சக்கணக்கான தமிழ்மக்களை இழந்து தவிக்கும் நாம் அந்த இனப்படுகொலைக்கான நீதியும் அரசியல் தீர்வும் வேண்டி சர்வதேசத் திடம் கோரும் நாம் இந்த நேரத்தில் எமக்கிடையே கசப்புணர்வுகளை களைந்து தமிழ்தேசியகூட்டமைப்பை பலப்படுத்த அனைவரும் பாடுபடுவோம் "எமது கையால் எமது கண்ணை குத்தும்"செயல்களை தவிர்த்து எமது இறுதி இலக்கை அடையும்வரை ஒற்றுமையாக பயணிப்போம்.இந்த கருத்தை கூறுவதால் சிலசமயம் எனக்கும் கொடும்பாவி யாரும் எரிக்கலாம் அல்லது எனக்கும் துரோகப்பட்டம் சுமத்தலாம் அதற்காக கருத்தைகூறாமல் இருக்கமுடியாது.
இதில் என்னால் கூறப்பட்ட கருத்தானது யாரையும் குற்றம் சாட்டவோ அல்லது குறைகூறுவதா கவோ இல்லை நாம் எடுக்கும் போராட் டங்கள் எதிரிக்கு சாதகமாக அமையக் கூடாது என்பதற்காகவே இதனை தெரிவித்துள்ளேன்.
பா.அரியநேத்திரன்
தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர்
மட்டக்களப்பு

Post a Comment

0 Comments