வாழைச்சேனை, கல்மடுவில் சட்டவிரோதமாக மான் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரை கல்குடா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவு கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷன் சிவரஞ்சனி என்பவரே நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து ஒரு கிலோகிராம் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
0 comments: