Home » » மட்டக்களப்பு செட்டிபாளையம் குழந்தை பாணம ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு செட்டிபாளையம் குழந்தை பாணம ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து கதிர்காமத்துக்கு சென்ற போது பாணம, தெம்பிலிவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த தம்பதியினரின் குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

பாணம, தெம்பிலிவத்த பிரதேசத்தில் உள்ள குபுக்கன் ஓயா வாவியில் குளித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



களுவாஞ்சிக்குடி, செட்டிப்பாளையம் கட்டுப்பிள்ளையார் ஆலய வீதியை சேர்ந்த சுந்தரலிங்கம் வினோஜன்(05வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.



குழந்தையை குளிப்பாட்டி கரையில் விட்டுவிட்டு தாயும் தந்தையும் குளித்துக்கொண்டிருந்தபோது குழந்தை தவறுதலாக நீரில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



சடலம் பானம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பானம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |