கொல்கத்தாவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45வது வயதில் ஜசிமுதீன் அகமது என்ற ஆசிரியர் காதலராக கிடைத்துள்ளார்.
ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளான கங்கா மற்றும் ஜமனா மோன்டால் ஆகியோர் சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன் சர்க்கஸ் கம்பெனியில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிய வந்த பள்ளி ஆசிரியரான ஜசிமுதீன் அகமது அவர்களை கண்டவுடன் காதல் கொண்டார். அவர்கள் இருவரும் இவர் தான் தங்களை உண்மையாக காதலிப்பதாக உணர்ந்தனர். ஆகையால் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இது பற்றி இரட்டையர்களில் ஒருவரான ஜமுனா கூறுகையில், கடந்த காலங்களில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டோம். இனிமேலும் நாங்கள் அவதிப்பட விரும்பவில்லை. வரும் காலம் முழுவதையும் நாங்கள் அவருடன் கழிப்போம் என நம்புகிறோம் என்றார். வறுமையில் வாடிய பெற்றோர் தங்களை கவனிக்க இயலாத நிலையில் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக சர்க்கசில் சேர்ந்துள்ளனர். சர்க்கசில் சேர்ந்த சிறிது காலத்திற்கு பின் நாளொன்றுக்கு 25 பவுண்டுகளை அவர்கள் ஊதியமாக பெற்றுள்ளனர்.
தன்னுடைய காதல் குறித்து அகமது கூறுகையில், ஒவ்வொரு தடவை அவர்கள் வேதனைப்படுவதை பார்த்தபோது, தான் வேதனை அடைந்தது போல் கருதியதாக கூறினார். தற்போது ஒவ்வொரு இரவையும் நான் அவர்களுடனேயே கழித்து வருகிறேன் என்ற அவர், மொட்டை மாடியில் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டே நாங்கள் எங்கள் வாழ்க்கையை பற்றி பேசிக்கொள்வோம் என்றார். இப்படிப்பட்ட நல்லவர் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கின்றதோ என்ற எண்ணம் நமக்கு எழுகின்றது.
0 comments: