Home » » காணாமல் போன மலேசிய விமானத்தில் சகோதரர் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் தனது மகள் .

காணாமல் போன மலேசிய விமானத்தில் சகோதரர் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் தனது மகள் .

கடந்த மார்ச் மாதம் காணாமல் போன மலே­ஷிய விமா­னத்தில் தனது சகோ­தரர் மற்றும் அவ­ரது மனை­வியை இழந்த அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த பெண் ஒரு வர், உக்­ரைனில் சுட்டு வீழ்த்­தப்­பட்ட விமா­னத்தில் தனது மகள் மற்றும் அவ­ரது கண­வரை இழந்­துள்ளார்.
வாழ்க்­கையில் பல­ருக்கும் பல வகையில் சோகங்கள் ஏற்­ப­டு­வ­துண்டு.
ஆனால், ஒரு­வ­ருக்கு ஒரே ஏர்லைன்ஸ் மூல­மாக இப்­படி ஒரு மோச­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது என்று அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்கள் கவலை வெளி­யிட்­டுள்­ளன.
அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த கைலேன் மன் என்ற பெண்ணின் சகோ­தரர் ரோட் பர் ரோஸ், அவ­ரது மனைவி மேரி பர்ரோஸ் இரு­வரும் கடந்த மார்ச் மாதம் காணாமல் போன மலே­ஷியன் ஏர்லைன்ஸ் விமா­னத்தில் பயணம் செய்­துள்­ளனர்.
அவர்­களை இழந்த சோகத்தில் இருந்து கை லேன் மன் இன்னும் மீளாத நிலையில், கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு உக்­ரைனில் சுட்டு வீழ்த்­தப்­பட்ட மலே­ஷியன் ஏர்லைன்ஸ் விமா­னத்தில் தனது மகள் மரீ ரிஸ்க் அவ­ரது கணவர் ஆல்பர்ட் ஆகி­யோரை இழந்­துள்ளார்.
இப்­படி அடுத்­த­டுத்து குடும்ப உறுப்­பி­னர்­களை விமான விபத்தில் இழந்­துள்ள கைலேன் மன் மற்றும் அவ­ரது சகோ­தரர் துய­ரத்தில் ஆழ்ந்­துள்­ள­தாக குறித்த ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
மலே­ஷிய பிர­த­மரின் பாட்­டியும் உயிரிழந்தார்
இதே­வேளை, சுட்டு வீழ்த்­தப்­பட்ட மலே ஷிய விமா­னத்தில் பய­ணித்த மலே­ஷிய பிர­த­மரின் பாட்­டியும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
குறித்த விமா­னத்தில் மலே­ஷிய பிர­தமர் நஜிப் ரசாக்கின் (ஒன்று விட்ட) பாட்டி சித்தி அமீ­ராவும் பய­ணித்து, பலி­யா­னது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. நஜிப் ரசாக்கின் தாய் வழி தாத்­தாவின் இரண்­டா­வது மனை­வி­யான சித்தி அமீரா (வயது 83) உற­வி­னர்­களின் பரா­ம­ரிப்பில் நெதர்­லாந்தில் வசித்து வரு­கிறார்.
இன்னும் சில தினங்­களில் ரமழான் பண்­டி­கையை தனது சொந்த மண்­ணான இந்­தோ­னேஷி­யாவில் கொண்­டா­டு­வ­தற்­காக இந்த பாட்டி ஆம்ஸ்­டர்­டாமில் இருந்து தனி­யாக விமானம் ஏறி வந்­துள்ளார்.
இந்­நி­லையில் விமானம் ரஷ்ய- உக்ரைன் எல்­லையை கடக்­கும்­போது சுடப்­பட்­டதால் அனைத்து பய­ணி­க­ளுடன் அவரும் பலி­யா­கி­யுள்ளார்.
ஒரே குடும்­பத்தில் 6 பேர் பலி
மேலும், சுட்டு வீழ்த்­தப்­பட்ட இந்த விமா­னத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் ஊர் திரும்பியபோது இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |