Home » » சர்வதேச விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் இராணுவம் வடக்கிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம்

சர்வதேச விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் இராணுவம் வடக்கிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம்

ஜெனிவாத் தீர்­மா­னத்­திற்­க­மைய விசா­ரணை ஒன்று இடம்­பெ­று­மாயின் இங்கு என்ன நடந்­தது என்­பதை சர்­வ­தேசம் அறிந்­து­கொள்ளும். அவ்­வா­றான ஒரு சூழல் ஏற்­ப­டு­மாயின் இங்­கி­ருக்­கின்ற இரா­ணுவம் வெளி­யேற்­றப்­ப­டலாம் என சுவிஸ்­நாட்டின் தூதுவர் தோமாஸ் லிட் செருடன் குழு­வினர் தெரி­வித்­துள்­ளமை எமக்கு மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ள­தென வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
யாழ்ப்­பா­ணத்­திற்கு நேற்று விஜயம் செய்த சுவிஸ்­நாட்டின் தூதுவர் தோமாஸ் லிட் செருடன் மற்றும் அந்த நாட்டின் மனித விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் கொன்­சன்ரைன் ஒபோ­லென்ஸ்கீ ஆகியோர் உள்­ளிட்ட குழு­வினர் மாலை வட­மா­காண முத­ல­மைச்­சரை அவ­ரு­டைய யாழ்.இல்­லத்தில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினர்.
இச்­சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே முத­ல­மைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இச்­சந்­திப்புத் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
சுவிஸ்­நாட்டின் நிதி­யு­த­வி­யுடன் வடக்கில் செயற்­ப­டுத்­தப்­பட்டு வருகின்ற உதவித் திட்­டங்கள் அடுத்த ஆண்­டுடன் முடி­வு­றுத்­தப்­ப­ட­வுள்ள நிலையில் அதன் ­பின்­ன­ரான செயற்­பா­டுகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கா­கவே குறித்த குழு­வினர் நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்­தி­ருந்­தனர். இவர்கள் என்­னுடன் கலந்­து­ரை­யா­டிய போது தற்­போது இங்­குள்ள நிலை எவ்­வா­றுள்­ளது-?- இங்­குள்ள மக்கள் எவ்­வா­றான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்? நாங்கள் எவ்­வா­றான பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்றோம் போன்ற விட­யங்கள் தொடர்­பாக எம்­மிடம் கேட்­ட­றிந்து கொண்­டனர்.
வட­மா­காண சபைக்கு நிய­திச்­சட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான நிதிப் பங்­க­ளிப்­பினை சுவிஸ் அர­சாங்­கமே எமக்குச் செய்­தி­ருந்­தது. இந்தச் சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் அவர்கள் எமக்கு உத­வு­வார்கள்.
இரா­ணு­வத்­தினர் இங்கு நிலை­கொண்­டி­ருப்­பதால் பொது­மக்­க­ளுக்கு எவ்­வா­றான பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­கின்­றது என்ற விடயம் தொடர்­பா­கவும் இவ்­வாறு இரா­ணு­வத்­தினர் இங்கு நிலை­கொண்­டுள்­ளதால் சமூக, பொரு­ளாதா விருத்­திக்கு எவ்­வா­றான பங்கம் விளை­விக்­கப்­ப­டு­கின்­றன என்ற விடயம் தொடர்­பா­கவும் அவர்­க­ளிடம் நான் சுட்­டிக்­காட்­டி­யுள்ளேன்.
மேலும் தாம் சென்று பார்க்க வேண்­டிய இடங்கள் தொடர்­பிலும் அவர்கள் எம்­மிடம் வினா­வினர். இதன்­போது நான் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய் பகு­தி­க­ளுக்குச் சென்று பார்­வை­யி­டு­மாறு அவர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளேன். வடக்கு– கிழக்கு தமிழர் பிர­தே­ச­மாக இருந்து வந்த இடங்­களில் வடக்கு, கிழக்கு தொடர்ச்­சி­யாக தமிழர் பிர­தே­ச­மாக இருக்­க­வில்லை என்று காட்­டு­வ­தற்­காக சுமார் 500 சிங்­களக் குடும்­பங்­களை இப்­ப­கு­தி­களில் குடி­யேற்­றி­யுள்ள விட­யத்­தி­னையும் தூது­வ­ரிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளேன்.
இதேபோல் நாங்கள் இங்கு இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­ளவில் இருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம். அதற்கு அவர்கள் ஜெனிவாத் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் விசா­ர­ணைகள் இடம்­பெற்றால் இங்கு எவ்­வா­றான சூழல் நில­வு­கின்­றது என்ற விடயம் சர்­வ­தேச நாடு­க­ளுக்குத் தெரியவரும். சர்வதேச நாடுகளும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு விசார ணைகள் இடம்பெற்ற பின்னர் நாங்கள் குறிப்பிடுகின்ற இராணுவம் பற்றிய விடயங்கள் தொடர்பில் இராணு வத்தினரை கட்டாயமாக இங்கிருந்து திரும்பப் பெறவேண்டி வரலாம் என அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |