மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு நேற்று மாலை 05.30 மணிக்கு ஆரம்பமானது . இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர். 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு ஆலய திருக்கதவு திறக்கப்பட்டது .25 ஆம் திகதி புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டப்பட்டு ,நேற்று மாலை இடம்பெற்ற ஆலய தீமிதிப்பு நிகழ்வுடன் ஆலய வருடாந்த நிகழ்வுகள் நிறைவுபெற்றது.
0 Comments