Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காய்க்கத் தொடங்கிய பேரீச்சை மரங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சை  மரங்களில்  காய்க்கத் தொடங்கியுள்ளன.
காத்தான்குடி 6ஆம் குறிச்சி மற்றும் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள  பேரீச்சை மரங்களே இவ்வாறு காய்க்கத் தொடங்கியுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால்; காத்தான்குடி பிரதான வீதியை அழகுபடுத்துவதற்காக நடப்பட்ட மேற்படி பேரீச்சை மரங்கள் வருடம் தோறும்  மே, ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் காய்த்து பழமாகின்றன.
காத்தான்குடி பிரதான வீதியில் 50 இற்கும் மேற்பட்ட பேரீச்சை  மரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments