Home »
எமது பகுதிச் செய்திகள்
» பாகிஸ்தான் நாட்டவருக்கான ஒன் அரைவல் வீசா முறையை ரத்துச் செய்தது அரசாங்கம்!
பாகிஸ்தான் நாட்டவருக்கான ஒன் அரைவல் வீசா முறையை ரத்துச் செய்தது அரசாங்கம்!
பாகிஸ்தான் நாட்டவருக்கு வழங்கப்பட்டு வரும் ஒன் அரைவல் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பாகிஸ்தானியர்களுக்கு இலங்கை ஒன் அரைவல் வீசா வழங்கி வந்தது. ஆனால், தற்போது ஒன் அரைவல் வீசா வழங்குவதில்லை என்பதனை இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகளவில் பாகிஸ்தானியர்கள் அரசியல் தஞ்சம் கோரி வருவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவே எதிர்வரும் காலங்களில் வீசா விண்ணப்பம் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: