Home » » மட்டக்களப்பு தாழங்குடாவில் அதிகாலையில் விபத்து! - ஆலயத்தில் இருந்து திரும்பிய ஒருவர் பலி, 21 பேர் காயம்.

மட்டக்களப்பு தாழங்குடாவில் அதிகாலையில் விபத்து! - ஆலயத்தில் இருந்து திரும்பிய ஒருவர் பலி, 21 பேர் காயம்.

மட்டக்களப்பு, தாழங்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாழங்குடாவில் உள்ள அரிசி ஆலைக்கு முன்பாக வான் ஒன்றும் கன்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்களே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |