Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலய புனராவர்த்தான ஏககுண்ட பசஷ் மஹா கும்பாபிஷேகம் - 2014

மட்டு நகரினிலே புகழ் பதியாம் குருக்கள்மடத்தில் அமைந்துள்ள குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலயம் பல்வேறு வரலாறுகளோடு புகழ் பெற்று விளங்குவதாகும். இவ்வாலயத்துக்கு பல வரலாற்றுக் கதைகளும் உள்ளன. அந்த அளவுக்கு புகழ் பெற்ற பழைமையான ஆலயமாகவும் செல்லக் கதிர்காம சுவாமி ஆலயம் திகழ்கின்றது. இவ்வாலயத்தில் அமைந்துள்ள முருகன் வள்ளி தெய்வானையோடு அடியார்களுக்கு கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுக்கின்ற சிறப்புக்குரியவர். இவ்வாலயமானது பல்வேறு வகையிலும் புனராவர்த்தனம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு ஊர் மக்கள், பக்த அடியார்கள், ஆலய நிர்வாகம், மன்றங்கள் என பலதரப்பட்ட உதவிகள் மூலம் ஆலயம் பொலிவு பெறுகின்றது. இவ்வாலயத்தில் வருடார்ந்த மகோற்சவத் திருவிழாக்கள், பூசைகள் மிகச் சிறப்பாக இம்முறை இடம்பெற இருக்கின்றது. இதற்கு 9ம் நாள் திருவிழா தன்மன் செட்டிகுடி மக்களின்  தேர்த்திருவிழா இம்முறை மிகச் சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது. எமது பிரதேசத்தில் முதன் முறையாக புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் முருகப் பெருமான்  உலா  வர இருக்கிறார்.  அந்த வகையில்  இவ்வாலயம் மேலும்  பொலிவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கிரியாகால ஆரம்பம் 04.07.2014 வெள்ளிக்கிழமையும் பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு வைக்கும் தினமாக 08.07.2014 செவ்வாய்கிழமையும் மஹா கும்பாபிஷேசம் 09.07.2014 அன்றும் இடம்பெற விருக்கின்றது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஆலய பரிபாலன வண்ணக்குமார் சபை ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலயம், மட்/குருக்கள்மடம்.

அனைவரும் வருக!  இறையருள் பெறுக !



Post a Comment

0 Comments