தான் வளர்த்த ஆட்டினைச் சினைப் படுத்துவதற்காக ஆடு சினைப்படுத்தும் இடத்திற்கு ஆட்டைக் கொண்டு போன மனைவியை நையப்புடைத்துள்ளார் கணவர். ஊரெழுப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் காயமடைந்த மனைவி தற்போது கணவரைப் பிரிந்தூ தாயாருடன் இருப்பதாகத் தெரியவருகின்றது.
பல நாட்களாக தான் வளர்த்து வந்த ஆட்டைச் சினைப் படுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லச் சொல்லி கணவரைக் கேட்டதாகவும் உழவு இயந்திரம் வைத்து தொழில் செய்து வரும் கணவர் அதை அலட்சியம் செய்ததால் தானே ஆட்டைக் கொண்டு சென்று சினைப்படுத்தும் வீட்டில் விட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.
ஆடு சினைப்படுத்தும் இடம் வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது எனத் தெரிவித்த மனைவி தனது கணவர் ஆட்டை அங்கு கொண்டு சென்றதால் தரக்குறைவாகப் பேசி தன்னைத் தாக்கியதாகவும் அதற்கு கணவரின் நண்பரும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனது நண்பர்களுடன் குடித்துக் கும்மாளம் இடும் கணவர் அவர்களின் கதைகளைக் கேட்டு தன்னைப் பல முறை இவ்வாறு தாக்கியதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணக்க சபையை நாடவுள்ளதாகவும் கணவரின் இவ்வாறான தொல்லைகளால் தான் விவாகரத்துக்கு முயலப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ஆடு சினைப்படுத்தும் இடம் வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது எனத் தெரிவித்த மனைவி தனது கணவர் ஆட்டை அங்கு கொண்டு சென்றதால் தரக்குறைவாகப் பேசி தன்னைத் தாக்கியதாகவும் அதற்கு கணவரின் நண்பரும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனது நண்பர்களுடன் குடித்துக் கும்மாளம் இடும் கணவர் அவர்களின் கதைகளைக் கேட்டு தன்னைப் பல முறை இவ்வாறு தாக்கியதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணக்க சபையை நாடவுள்ளதாகவும் கணவரின் இவ்வாறான தொல்லைகளால் தான் விவாகரத்துக்கு முயலப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments