Home » » விபத்தில் மூவர் படுகாயம்

விபத்தில் மூவர் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரணி சந்திக்கருகில் வியாழக்கிழமை(5) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
செங்கலடியிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரச வாகனம் வேக கட்டுபாட்டை இழந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள்களுடன்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சத்துருகொண்டானை சேர்ந்த யோகம்மா சிவகொழுந்து  (வயது 56) என்பவரின் நிலையே கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடார்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |