Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை இன்று திறப்பு! - உகந்தையில் இருந்து 1000 யாத்திரிகர்கள் புறப்பட்டனர்

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை இன்று திறக்கப்பட்டுள்ளது.. காட்டுப்பாதையால் கதிர்காமம் செல்வதற்கு உகந்தையில் சுமார் 1000 யாத்திரிகர்கள் தங்கியிருந்ததாக வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் முதல்தொகுதி பாதயாத்திரீகர்கள் 1000பேர் புறப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்றும் நேற்றுமுன்தினமும் வனஜீவராசிகள் திணைக்களமும் கடற்படையினரும் 03 வேளையும் அன்னதானம் வழங்கினர்.யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட வேல்சாமி தலைமையிலான குழுவில் 92 பேர் உள்ளனர்.அதனைவிட வட,கிழக்கிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்த குழுவினரும் உகந்தையில் தங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments