Home » » நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வை ஜெயலலிதா புறக்கணிப்பார்?

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வை ஜெயலலிதா புறக்கணிப்பார்?

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது. நரேந்திர மோடி பிரதமராக வரும் 26-ந் தேதி மாலை பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளன.


பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ, ராஜபக்சவை அனுமதிக்கக் கூடாது என மோடியை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் சார்பில் வரும் 25ந் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளி என்று அறிவித்து தமிழக சட்டசபையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் ராஜபக்ச பங்கேற்கும் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது.அதே நேரத்தில் அதிமுக மூத்த தலைவர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |