ம.தெ.எ.ப. கோட்ட மட்ட தமிழ் மொழிதின விழா 03.05.2014 அன்று காலை 9.00 மணிக்கு மட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் உள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வுக்கு பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம் அவர்கள், பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் கோட்டக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள், கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஓய்வு பெற இருக்கின்ற திரு நாகராஜா உதவிக்கல்விப் பணிப்பாளர் - தமிழ் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு அவருக்கு பிரிசிலும் வழங்கப்பட்டது
0 Comments