ம.தெ.மே.பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிழடித்தீவு கிராமத்தில் "சுற்று சூழலை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் ஆற்றாங்கரை ஓரங்களில் கண்டல் தாவரங்கள் நடும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இன்று(09) சனிக்கிழமை இடம்பெற்றது.
இங்கு 400க்கும் மேற்பட்ட கண்டல் தாவரங்கள் நடப்பட்டதுடன் இதற்கான அனுசரணையை வேள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை ADP வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: