Home » » மட்டக்களப்பு மன்முனைப் பாலம் இன்று (19.04.2014) திறப்பு

மட்டக்களப்பு மன்முனைப் பாலம் இன்று (19.04.2014) திறப்பு

மண்முனைத்துறைக்கான  போக்குவரத்துப்பாலம் இன்று திறக்கப்படும் வேளையில் இவ்வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று நினைவுகூரப்படுகின்றனர்.இவ்வாயில் போக்குவரத்து காரணமாக மக்கள் தங்கள் உயிர்களை இழக்கும் சம்பவங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. 1973ம்ஆண்டு தொடக்கம் மரணமடைந்தவர்கள் சிலரின் பெயர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மண்முனை துறையை கடக்கும் போது அகால மரணம் அடைந்தவர்கள்
01.நல்லதம்பி தில்லையம்மா(முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
02.சாமித்தம்பி சின்னப்பிள்ளை (முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
03.சாமித்தம்பி தருமராசா (முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
04.நல்லதம்பி சின்னத்துரை(எழுதுவினைஞர்-மகிழடித்தீவு) காவு கொள்ளப்பட்ட நாள் – 26.12.1985
05.கனகசபை ஜயதரன்(உதவி அரசங்க அதிபர்-பட்டிப்பளை) காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
06.மாணிக்கப்போடி கங்கேஸ்வரி(ஆசிரியை முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
07.கதிர்காமப்போடி ஆறுமுகம்(பட்டிப்பளை)காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
08.செல்லத்தம்பி தங்கராசா(அரசடித்தீவு)காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
09.குமாரசிங்கம் வள்ளியமை(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
10.வேலுப்பிள்ளை சந்திரகுமார்(முதலைக்குடா)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
11.பாலிப்போடி கெதராஜ்(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
12.குமாரசிங்கம் கமலா
(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
13.வைரமுத்து அரன்கனதன்(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
14.விஜயலிங்கம் சுகந்தினி(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
15.விஜயலிங்கம் ஜெயந்தினி(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் ௨4.05.1992

இவர்களுடன் மேலும் சிலர்
படுவான்கரை மக்களின் பல நாள் கனவு மண்முனை வாவிக்கு ஓர் பாலம் வேண்டுமென்பது . அவ் ஆசை நாளைய தினம் 19-04 – 2013 இன்றையதினம் நிறைவேறப் போகின்றது. 30 வருடங்களாக பலத்த இன்னல்க்ளின் மத்தியில் படகு மூலம் பயணித்த இம் மக்களுக்கு நாளைய நாள் வாழ்வில் மறக்க முடியாத உன்னத்த நாளாக அமையப்போகின்றது. பலத்த உயிர்களை பலிகொண்ட இவ் வாவியின் பசிக்கு இனி எந்த உயிரும் இரையாகப்போவதில்லை. மறக்க முடியாத படகு பயணம் நாம் நினைத்தாலும் இனி வராது. புதிய புதிய உறவுகளுக்கும் , தகவல் பரிமாற்றத்துக்கும் கேந்திர நிலையமாக இருந்த படகை இனி நாம் எப்போது காண்போம்!!!!!!!! பாதை பயணங்களும், அரட்டைகளும் சுகமான நினைவுகளாக எம் வாழ் நாளில் எப்போதும் இருக்கும்.

























                             





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |